
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுளின் கண்ணுக்கு அற்பமானது எதுவுமில்லை. அதுபோல உனக்கும் அற்பமானது ஏதும் இருக்க வேண்டாம்.
* மனதில் எழும் ஒவ்வொரு எண்ணமும் கடவுளுக்கான காணிக்கையாகட்டும்.
* பிறருக்குச் செய்யும் உதவியால் மனிதன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான்.
* பயன் இல்லாத கற்பனையை விட்டொழி. கண்களைத் திறந்து பார். உண்மையை உணர்ந்து கொள்வாய்.
* நீ மட்டும் அறிவாளி என்று நினைக்காதே. பிறர் கருத்துக்கும் மதிப்பு அளிக்க கற்றுக் கொள்.
* ஒரு எறும்பின் உயிரைக் காப்பது, ஒரு பேரரசை நிறுவுவதை விடச் சிறந்த செயலாகும்.
-அரவிந்தர்