sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

13

முந்தைய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1012

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது இரவு நடைபெற்ற ரிஷப வாகனத்தில் தேனுபுரீஸ்வரர் மற்றும் அம்பாள்

இன்றைய போட்டோ

13-May-2024

மேஷம்; அசுவினி: ஞான மோட்சக்காரகனான கேது, ரத்தக்காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்து, எதையும் சாதிக்கும் வல்லமையும் கொண்ட உங்களுக்கு 6ல் சஞ்சரிக்கும் கேது அளப்பரிய ஆற்றல் வழங்குவார். தொழில், வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். பணியாளர்கள் ஒத்துழைப்பால் லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். வழக்கு விவகாரம் வெற்றியாகும். பணியில் இருந்த பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். ராசிக்குள் சஞ்சரிக்கும் சுக்கிரனால் பொன் பொருள் சேரும். வரவு அதிகரிக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். நீண்ட நாளாக பேசிப் பார்த்து விலைக்கு வராத இடம் இந்த மாதம் வரும். பத்திரம் கையெழுத்தாகும். மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாய், சனியின் பார்வைக்கு ஆளாவதால் செயல்கள் இழுபறியாகும். முயற்சி தள்ளிப்போகும் என்றாலும் விடா முயற்சியால் வெற்றியடைவீர்கள். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு கழுத்தில் மாங்கல்யம் ஏறும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர். மாணவர்களுக்கு மேற்கல்வி எண்ணம் நிறைவேறும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி வரும்.சந்திராஷ்டமம்: மே 24,25அதிர்ஷ்ட நாள்: மே 16,18,27. ஜூன் 7, 9பரிகாரம்: விநாயகரை வழிபாடு நன்மை தரும். பரணி சுக்கிரன், செவ்வாயின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எதிலும் திட்டமிட்டு செயல்படும் ஆற்றலும் நினைத்ததை அடையும் அதிர்ஷ்டமும் இயல்பாகவே இருக்கும். வைகாசி மாதம் உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும் மாதமாக இருக்கப் போகிறது. சுக்கிரன் மாதம் முழுவதும் யோகத்தை தரப் போகிறார். பொன்னும் பொருளும் சேரும். வரவு கூடும். குடும்பத்தில்  நெருக்கடி மறையும். 2ல் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயர்வதுடன், உடல் பாதிப்புகள் விலகும். பணியில் உங்களுக்கேற்பட்ட நெருக்கடி தீரும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழில் நடத்துவோர் உயர்வு பெறுவர். தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். பெண்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் பெறுவர். வாழ்க்கைத்துணையின் ஆதரவால் விருப்பம் நிறைவேறும். வேலை தேடுவோரின் முயற்சி வெற்றியாகும். சிலர் வெளிநாட்டிற்கும் செல்வர். விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். விளைச்சல் பொருள் கூடுதல் விலை போகும். லாபச் சனியால் மூடிக்கிடந்த தொழில் மீண்டும் இயங்கும். உழைப்பவரின் விருப்பம் பூர்த்தியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். மாணவர்கள் விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கப் பெறுவீர்கள்.சந்திராஷ்டமம்: மே 25,26 அதிர்ஷ்ட நாள்: மே 15,18,24,27, ஜூன் 6,9பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட சங்கடம் தீரும்.கார்த்திகை 1 ம் பாதம்சூரியன், செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு சமூகத்தில் செல்வாக்கும், மற்றவருக்கு வழிகாட்டும் சக்தியும் இருக்கும். பிறக்கப் போகும் வைகாசி மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் தன குடும்ப ஸ்தானத்தில் குரு பகவானுடன் இணைவதால் திட்டமிட்டு செயல்படுவீர்கள்.  நினைத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள். இதுவரை இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். பணவரவு அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். அரசுத்தேர்வு எழுதியவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பணியில் சந்தித்த பிரச்னை விலகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். லாபச்சனியால் தொழில் விருத்தியாகும். வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உண்டாகும். குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலை உருவாகும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தொழிலில் இருந்த நெருக்கடி, தடைகள் விலகும். விவசாயிகளின் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கும். பெண்களுக்கு இக்காலம் யோக காலமாக இருக்கும். சிலருக்கு திருமணம் கைகூடி வரும். மாணவர்களுக்கு மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: மே 26அதிர்ஷ்ட நாள்: மே 18, 19, 27, 28, ஜூன் 1, 9, 10பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபட நன்மை அதிகரிக்கும்.

ரிஷபம்; கார்த்திகை 2,3,4 ம் பாதம்சூரியன், சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு செல்வமும் செல்வாக்கும் நிறைந்திருக்கும். புகழும் பெருமையும் இணைந்திருக்கும். பிறக்கும் வைகாசி மாதம்  எதிர்பார்ப்பை நிறைவேற்றும் மாதமாக இருக்கும். ராசிநாதனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பணவரவில் இருந்த தடை விலகும். பொருளாதார நிலை உயரும். பொன்னும், பொருளும் சேரும். ராசிக்குள் குரு பகவான் சஞ்சரிப்பதால் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் விருப்பம் நிறைவேறும். குழந்தை பாக்கியம், திருமண யோகம், சொத்து சேர்க்கை என்பதெல்லாம் உண்டாகும். மாதத்தின் முற்பகுதியில் செவ்வாய் லாப ஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் வருமானம் உயரும்.  தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவன், மனைவிக்குள் நிலவிய சங்கடம் தீரும். விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். தொழில்காரகன் சனி, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணியில் சங்கடங்கள் தோன்றும் என்றாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தியும் உங்களுக்குண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படும். பெண்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்களின் மேற்கல்விக்கனவு வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: மே 27அதிர்ஷ்ட நாள்: மே 15, 19, 24, 28, ஜூன் 1, 6, 10பரிகாரம்: சூரியனை வழிபட வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.ரோகிணி; மனக்காரகனான சந்திரன், அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, மன உறுதியும், திட்டமிட்டு செயல்படும் ஆற்றலும் இருக்கும். வைகாசி மாதம் உங்கள் வளமிக்க மாதமாக இருக்கப் போகிறது. லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் தைரியமாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால் குடும்பத்திலும், உங்கள் வாழ்விலும் நன்மை உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் அமையும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும். வேலை தேடுவோருக்கு எதிர்பார்த்த வேலை அமையும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். தம்பதியருக்குள் இருந்த சங்கடம் விலகும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் வந்து சேரும். உடலில் அசதி ஏற்பட்டாலும் உங்கள் செயல்களை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டு முயற்சி யோகத்தை உண்டாக்கும். பெண்களுக்கு வழக்கத்தை விட யோக மாதமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் தீரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். பிள்ளைகளால் நன்மை காண முடியும். விவசாயிகளுக்கு நெருக்கடி விலகும். மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மே 27, 28அதிர்ஷ்ட நாள்: மே 15, 20, 24, 29, ஜூன் 2, 6, 11பரிகாரம்: அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்.மிருகசீரிடம் 1,2 ம் பாதம்; செவ்வாய், சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ஒரு பக்கம் துணிச்சல், தைரியம், வேகம் இருந்தாலும், மறு பக்கம் விவேகமும் இருக்கும். எதிர் விளைவு பற்றி அறிந்து செயல்படுவீர்கள்.  வைகாசி மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் மாதத்தின் முற்பகுதியில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தடைபட்ட வருவாய் வரும். சொத்து சேரும். விருப்பம் நிறைவேறும். வழக்குகளில் சாதகமான நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பணியில் இருந்த சங்கடங்கள் விலகும். வெளிநாடு செல்ல  முயற்சித்தவர்களின் விருப்பம் நிறைவேறும். சூரியன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் வேலையில் பதட்டம் இருக்கும். எந்த வேலையை எப்போது செய்வது என்ற முடிவிற்கு வரமுடியாமல் திணறுவீர்கள். குரு பார்வையால் முயற்சி வெற்றியாகும். குலதெய்வ அருள் உண்டாகும். மேற்கல்வி முயற்சி நிறைவேறும். பணியாளர்கள் மேலதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். அதன் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தின் காரணமாக பயணங்கள் தோன்றும் என்றாலும் குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவர். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். கணவருடன் இணக்கமான சூழல் ஏற்படும். சுயதொழில் செய்யும் பெண்கள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவர். அரசியல்வாதிகள் நிலை உயரும். விவசாயிகள் எண்ணம் பூர்த்தியாகும். பொருளாதார நெருக்கடி விலகும். மாணவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: மே 29.அதிர்ஷ்ட நாள்: மே 15, 18, 24, 27, ஜூன் 6, 9.பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற சங்கடம் விலகும்.

மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; புதன், செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் மாதமாக அமையும். விரய ஸ்தானத்தில் குரு சஞ்சரித்தாலும் அவரது பார்வைகள் உங்களுக்கு யோகத்தை தரும்.  உடல்நிலையில் முன்னேற்றம், உறவுகளால் ஆதாயம், வியாபாரம், தொழிலில் வளர்ச்சி, போட்டியாளர்கள் விலகும் நிலை, செல்வாக்கு, புகழ் மீண்டும் தோன்றும் வாய்ப்பு உண்டாகும். இதுவரையில் தடைபட்ட முயற்சி வெற்றி பெறும்.  பணம் பலவழிகளிலும் வரும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்கள், சிறு தொழில் செய்வோர் நிலை உயரும். சனி, பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் விருப்பம் நிறைவேறும். தெய்வ அருள் உண்டாகும். உடல் பாதிப்பு விலகும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகி நிம்மதியான நிலை உண்டாகும். சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் மேற்கல்வி முயற்சி வெற்றியளிக்கும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். வேலை தேடுவோருக்கு  எதிர்பார்த்த தகவல் வரும். விவசாயிகளுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்களுக்கு விருப்பப்பட்ட கல்லுாரியில் இடம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மே 29.அதிர்ஷ்ட நாள்: மே 14,18,23,27, ஜூன் 5,9பரிகாரம்: உலகளந்த பெருமாளை வழிபட்டால் நன்மை உண்டாகும்.திருவாதிரை: ராகு, புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு அதிர்ஷ்டம் என்பது தானே வரும். நினைத்ததை அடையும் யோகம் இயல்பாகவே இருக்கும். முன்னேற்றப் பாதையில் நடைபோடும் உங்களுக்கு வைகாசி யோகமான மாதமாக இருக்கும். சனி பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து தொழில், வியாபாரத்தில் லாபத்தை வழங்கப் போகிறார்.  துணிச்சல், தைரியம் அதிகரிக்கும்.  எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதுடன் வழக்குகளிலும் வெற்றியை வழங்கப் போகிறார். மாதத்தின் பிற்பகுதியில்  லாபாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். பணம் பலவழியிலும் வரும். விருப்பம் நிறைவேறும்.செல்வாக்கு அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்னை முடிவிற்கு வரும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். வெளிநாடு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். அரசியல்வாதிகளுக்கு ஆதாய மாதமாக இருக்கும். தைரியமுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். அனைத்திலும் லாபமான நிலை ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பெண்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் உண்டாகும்.   முயற்சி யாவும் வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு புதிய வேலை அமையும். சுயதொழில் செய்வோர் லாபம் காண்பர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் உண்டாகும். விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். மாணவர்களின் மேற்கல்வி முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: மே, 30.அதிர்ஷ்ட நாள்: மே. 14, 22, 23, 31. ஜூன், 4, 5, 13.பரிகாரம்: பாலாம்பிகையை வழிபட வாழ்க்கை வளமாகும்.புனர்பூசம் 1,2,3 ம் பாதம்; புதன், குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு சாதுரியம், சாணக்கியத்தனம் பிறவிச்சொத்தாக இருக்கும். உங்கள் குறிக்கோளை அடையக் கூடியவர்கராக இருப்பீர்கள். பிறக்கும் வைகாசி மாதம் ஆதாயமானதாக அமையும். உங்கள் மூன்றாம் அதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் குருவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். ஆனால் அவை எல்லாம்  ஆதாயம் தரக் கூடியதாக இருக்கும். புதிய சொத்து, வாகனம், நகை  வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு வரன் அமையும். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடி விலகும். பட்டம் பதவி பொறுப்பு தேடி வரும். அரசியல்வாதிகளின் எண்ணம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். மாதம் முழுவதும் சனி பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். உடலில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர். பெண்கள், வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக இருப்பர். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணியில் இருந்த பிரச்னை விலகும். சிலருக்கு புதிய பொறுப்பு, விரும்பிய இடமாற்றம் ஏற்படும். விவசாயிகளின் விருப்பம் பூர்த்தியாகும். திறமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பணியாளர்கள் நிலை உயரும். மாணவர்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: மே 31.அதிர்ஷ்ட நாள்: மே 14, 21, 23, 30. ஜூன் 3, 5, 12பரிகாரம் மீனாட்சியம்மனை வழிபட வாழ்வு வளமாகும்.

புனர்பூசம் 4ம் பாதம்: குரு,சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு புத்தி கூர்மையும், அறிவாற்றலும், எந்த செயலையும் திட்டமிட்டு செய்யும் சக்தியும் இருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்களுக்கு வசந்த மாதமாக அமையும். இதுநாள் வரையில் நீங்கள் அடைந்த சங்கடங்களை எல்லாம் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு இனி இல்லாமல் செய்வார். தொழில், வியாபாரம், வேலையில் இருந்த நெருக்கடி விலகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.  வருவாய் அதிகரிக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தோரின் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். உங்கள் வாழ்க்கையில் தொட்டதெல்லாம் இனி பொன்னாகப் போகிறது. இருந்தாலும், அஷ்டம ஸ்தானத்தில் சனி இருப்பதால் உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. தன, குடும்பாதிபதி லாப ஸ்தானத்தில் குருவுடன் இணைந்து இருப்பதால் குடும்ப பிரச்னை மறையும். வாழ்க்கைத்துணை உங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவார். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். பொன் பொருள் சேரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். விவசாயிகள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் எண்ணம் நிறைவேறும். பணியாளர்களின் நிலை உயரும். மாணவர்களின் மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும்.சந்திராஷ்டமம்: மே 31அதிர்ஷ்ட நாள்: மே 20,21,29,30, ஜூன் 2,3,11,12பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.பூசம்; சனி, சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தெளிவான சிந்தனையும், திடமான மனமும் இருக்கும். சிந்தித்து செயல்பட்டு நினைத்ததை சாதிக்கக் கூடியவர்களான உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமாக அமையும். சனிபகவான் 8ல் சஞ்சரித்தாலும், 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது, 11ல் சஞ்சரிக்கும் குரு, சூரியன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவர். தொழிலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.  பணியாளர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். இதுவரையில் இருந்த சங்கடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். தம்பதியருக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகி ஒற்றுமை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.  பொன் பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பெண்களுக்கு இந்த மாதம் விருப்பம் பூர்த்தியாகும் மாதமாக இருக்கும். சுயதொழில் செய்பவர்களின் நிலை உயரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பொறுப்பு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, எதிர்பார்த்த பதவி வரும். விவசாயிகள் இந்த மாதம் விளைச்சலில் கவனம் செலுத்துவது நல்லது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படும். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் விருப்பப்பட்ட கல்லுாரியில் சேருவர்.சந்திராஷ்டமம்: ஜூன் 1அதிர்ஷ்ட நாள்: மே 17, 20, 26, 29, மே 2, 8, 11பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நலம் உண்டாகும்.ஆயில்யம்; புதன், சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு புத்திசாலித்தனம், திட்டமிட்டு செயல்படும் திறனும் இருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை வழங்கும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் மாதத்தின் முற்பகுதியில் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய சொத்து வாங்குதல், புதிய ஒப்பந்தங்கள் என கையெழுத்திடுவீர்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். 11ல் சூரியன் சஞ்சரிப்பதால் அரசுவழி முயற்சிகள் வெற்றியாகும். வேலைவாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டியாளர்கள் விலகிச் செல்வர். தனித்திறமை வெளிப்படும். வழக்கு சாதகமாகும். பெண்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். குலதெய்வ அருள் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் ஏற்படும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். விவசாயிகள் கவனமாக செயல்படுவதால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மாணவர்களின் விருப்பம் நிறைவேறும்.சந்திராஷ்டமம்: ஜூன் 2அதிர்ஷ்ட நாள்: மே 14, 20, 23, 29, மே 5, 11பரிகாரம்: அபிராமியை வழிபட தடைகள் விலகி நன்மை சேரும்.

மகம்: கேது, சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தெய்வ அருளும் ஈடற்ற சக்தியும் இருக்கும். வைகாசி மாதம் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை தரும் மாதமாக இருக்கும். சக்கர வியூகத்தில் சிக்கிக் கொண்டு தடுமாறுவது போல், 2ல் கேது, 8ல் ராகு, 7ல் சனி, 10ல் குரு என நான்கு பக்கமும் கிரகங்கள் உங்களை சுற்றி வளைத்துக் கொண்டுள்ள நிலையில் ராசிநாதன் சூரியன் 10ல் சஞ்சரித்து உங்களை வெளியில் கொண்டுவர உள்ளார். உங்கள் ராசி நாதனின் சஞ்சார நிலை உங்கள் நிலையை உயர்த்தும். வியாபாரம், தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். வெளியூரில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள் என்றாலும், பணியாளர்கள் கவனமாக செயல்படுவது அவசியம். வியாபாரம், தொழிலில் கூடுதல் கவனம் தேவை. புதிய முதலீடு செய்யும் முன் பலமுறை யோசிக்க வேண்டும். சனி 7 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் நட்பு வட்டத்தில் வீண் பிரச்னைகள் உருவாகும். கூட்டுத்தொழிலில் நெருக்கடி உண்டாகும். இக்காலத்தில் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதன் வழியாக உங்கள் சங்கடங்கள் தீரும். பொன், பொருள் சேரும்.  பணவரவு திருப்தி தரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பெண்கள் இக்காலத்தில் கவனமாக செயல்படுவது நன்மையாகும். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வதால் நெருக்கடி தீரும். வார்த்தைகளில் கவனம் தேவை. இல்லையெனில் பேச்சு மூலம் வீண் பிரச்னைகள் உண்டாகும். ஆரோக்கியம்  மேம்படும். விவசாயிகளின் சங்கடங்கள் விலகும். விளைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். அரசியல்வாதிகளின் முயற்சிகள் தள்ளிப் போகும். இக்காலத்தில் ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் நீண்ட முயற்சிக்குப் பின் விரும்பிய கல்லுாரியில் சேருவர். சந்திராஷ்டமம்: ஜூன் 2, 3.அதிர்ஷ்ட நாள்: மே16,19,25,28, ஜூன்1, 7, 10பரிகாரம்:  கேதுவை தினமும் வழிபட நன்மைகள் உண்டாகும்.பூரம்; சுக்கிரன், சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எதிலும் வெற்றி பெறும் ஆற்றல் இருக்கும். எதிர்பார்த்த நன்மையை அடையும் மாதமாக வைகாசி இருக்கும். நட்சத்திர நாதன் மாதத்தின் முற்பகுதியிலும், ராசிநாதன் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் நெருக்கடி விலகும். முயற்சி வெற்றியாகும். வெளியூர் பயணம் லாபத்தில் முடியும் என்றாலும் பணியாளர்கள் தங்கள் பணியில் கவனமாக இருப்பது அவசியம். சிலர் அதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாக நேரும். 10ல் குரு சஞ்சரிப்பதால் வேலையில் நெருக்கடி அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னை தோன்றும். 8 ல் ராகு இருப்பதால் எதிர்பாராத பிரச்னை  தேடி வரும். பணியாளர்கள் இக்காலத்தில் கவனமாக செயல்படுவதால் சிக்கல்களில் இருந்து விடுபடலாம். கும்ப சனியால் குடும்பம், நண்பர்கள் இடத்தில் சங்கடம் தோன்றும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். பெண்களுக்கு மாதத்தின் முற்பகுதி சாதகமாகும். பிற்பகுதியில் பொருளாதார  நெருக்கடி தோன்றும் என்றாலும் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். நோய்கள் சிகிச்சையால் சரியாகும். அரசியல்வாதிகள் மற்றவர்களை அனுசரிப்பதுடன் எதிர்மறை சிந்தனைக்கு இடம் தர வேண்டாம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். கலைஞர்களுக்கு மாத முற்பகுதி யோகமாக இருக்கும். மாணவர்கள் மேற்கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 3, 4அதிர்ஷ்ட நாள்: மே 15, 19, 24, 28, ஜூன் 1, 6, 10பரிகாரம்: வராகியை வழிபட சங்கடம் அனைத்தும் விலகும்.உத்திரம் 1 ம் பாதம்; சூரியனின் நட்சத்திரத்திலும் ராசியிலும் பிறந்த நீங்கள் அனைத்திலும் முதன்மையாக இருப்பீர்கள். வைகாசியில் உங்கள் நட்சத்திர, ராசிநாதன் 10 ல் சஞ்சரிப்பதால் நெருக்கடி விலக ஆரம்பிக்கும். தொழிலை விரிவு செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும். பணியாளர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். சனி, ராகு, கேது, குருவின் சஞ்சார நிலைகள் சாதகமாக இல்லை என்பதால் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். என்றாலும் குருவின் பார்வைகள் உங்கள், குடும்ப, சுக, சத்ரு ஸ்தானங்களில் பதிவதால் குடும்பத்தில் அமைதி இருக்கும். பண வரவு உண்டாகும். சந்தோஷம் அதிகரிக்கும், நோய்களும், எதிர்ப்பும் விலகும். போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும். அரசியல்வாதிகளுக்கு இதுவரையில் இருந்த செல்வாக்கில் மாற்றம் ஏற்படும். பெண்கள் எந்தச் செயலிலும் அமைதி காப்பது அவசியம். இக்காலத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.  புதிய முயற்சிகளில் ஈடுபடும் முன் யோசிப்பது நல்லது. பணியாளர்கள் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரும். உடன் பணிபுரிபவர்ளும் எதிராக மாறுவார்கள் என்பதால் எச்சரிக்கை தேவை. விவசாயிகளின் விலை பொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கும். மேற்படிப்பிற்காக மாணவர்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 4, 5அதிர்ஷ்ட நாள்: மே 19, 28, ஜூன் 1, 10பரிகாரம்: சூரிய வழிபாடு மனநிம்மதியை உண்டாக்கும்.

உத்திரம் 2,3,4 ம் பாதம்: புதன், சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு வெற்றி தேவதை எப்போதும் துணையிருப்பாள். வைகாசி மாதம் யோகமான மாதமாக இருக்கும். தனக்காரகனான குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து 5ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் வாழ்வில் இருந்த சங்கடம் அனைத்தும் மறைந்து விடும். அதிர்ஷ்ட மழையில் நீங்கள் நனையப் போகிறீர்கள். பொன்னும் பொருளும் சேர்வதுடன் புதிய சொத்தும் உங்களை வந்தடையும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். 6 ல் சஞ்சரிக்கும் சனிபகவான் சங்கடங்களை எல்லாம் விலக்குவார். உடல் பாதிப்பு மறையும். தொழில், வேலையில் உள்ள நெருக்கடி மறையும். எதிரி தொல்லைகள் விலகுவதுடன் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் பிரச்னை நீங்கும். பெண்களுக்கு நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும். திருமண வயதினருக்கு நல்ல வரன் அமையும்.  வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயம் தரும். விவசாயிகளுக்கு கடந்த மாதம் இருந்த நெருக்கடி தீரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  மாணவர்களின் விருப்பம் நிறைவேறும். சந்திராஷ்டமம்: ஜூன் 4, 5அதிர்ஷ்ட நாள்: மே 14, 19, 23, 28, ஜூன் 1, 10பரிகாரம்: விநாயகரை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.அஸ்தம்: சந்திரன், புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு நினைத்ததை சாதிக்கும் சக்தி இருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் வாழ்க்கையில் வளம் தரும் மாதமாக இருக்கும். ஜென்ம கேதுவால் எல்லாவித சங்கடங்களையும் அனுபவித்து வந்ததுடன், நோயுடன் போராடி வந்த உங்களுக்கு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் அவற்றில் இருந்து விடுதலை உண்டாகப் போகிறது. குருவின் பார்வைக்கு கேது ஆளாவதால் அவரால் எந்த சங்கடங்களையும்  ஏற்படுத்த முடியாது. இனி நீங்கள் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். 6 ல் சஞ்சரிக்கும் சனி பகவானும் சங்கடங்களை விரட்டியடிப்பார். தைரியமாக செயல்பட்டு வெற்றி அடையும் நிலையை ஏற்படுத்துவார். தொழில், வியாபாரத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விரும்பிய இடமாற்றம், உயர்வு உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் கனவு நனவாகும். பெண்கள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். சிலருக்கு திருமண யோகம் உண்டாகும். தைரியமாக செயல்படும் நிலை ஏற்படும். விவசாயிகள் கடந்த காலத்தில் சந்தித்த நெருக்கடிகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த நன்மை ஏற்படும். கலைஞர்களுக்கு இது யோகமான மாதம். மாணவர்களின் மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 5, 6அதிர்ஷ்ட நாள்: மே14, 20, 23, 29, ஜூன் 2, 11பரிகாரம்: சந்திரனுக்கு வெள்ளை அல்லியை சார்த்தி வழிபட வாழ்வு வளமாகும்.சித்திரை 1,2 ம் பாதம்; செவ்வாய், புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தைரியம், விவேகத்துடன்  செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் சக்தி இருக்கும். வைகாசி மாதம் உங்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். சனி 6ல் சஞ்சரிப்பதாலும், குரு 9ல் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதுடன் 3, 5 ம் இடங்களை பார்ப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். நிறைவேறாமல் போன முயற்சி இனி நிறைவேறும். தடைபட்ட செயல்களில் லாபம் ஏற்படும். இழுபறியாக இருந்த வம்பு வழக்குகள் சாதகமாகும். செல்வாக்கு உயரும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் உண்டான போட்டி விலகும். நண்பர்கள், வாழ்க்கைத்துணையுடன் தோன்றிய நெருக்கடிகள் நீங்கும். ஜென்ம கேதுவால் ஏற்பட்ட குழப்பம் தீரும். புதிய இடம், வாகனம் வாங்குவது போன்ற முயற்சிகள் வெற்றியாகும் சிலர் புதிய தொழில் தொடங்குவர். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பணியாளர்கள் நிலை உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். பெண்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகி சுமூக நிலை ஏற்படும். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பர். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். விவசாயிகளின் விருப்பம் நிறைவேறும். கலைஞர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். மாணவர்களின் கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 6, 7அதிர்ஷ்ட நாள்: மே 14,18,23,27, ஜூன் 5, 9பரிகாரம்: விஷ்ணு துர்கையை வழிபட்டு வர நலம் உண்டாகும்.

சித்திரை 3,4 ம் பாதம்: தைரிய காரகனான செவ்வாய், அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்த நீங்கள் தைரியமாக செயல்பட்டு  முன்னேற்றம் அடையக்கூடியவர்களாக இருப்பீர்கள். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றும் மாதமாக இருக்கும். மாதத்தின் முற்பகுதியில் ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் ஆற்றல் அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு அகலும். தொழில் போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய வேலை அமையும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பெண்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு  யோகமான காலமாக இருக்கும். அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்களின் மேற்படிப்பு முயற்சி வெற்றி பெறும். சந்திராஷ்டமம்:  ஜூன் 6, 7அதிர்ஷ்ட நாள்: மே. 15, 18, 24, 27, ஜூன் 9 பரிகாரம்: சமயபுரம் மாரியம்மனை வழிபட நன்மை அதிகரிக்கும்.சுவாதி: யோகக்காரகன் ராகு, அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு செயல்படக் கூடியவர்களாக இருப்பீர்கள். பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதமாகும். உங்கள் நட்சத்திரநாதன் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். செயல்கள் யாவும் வெற்றி பெறும். உடலிலும், மனதிலும் புது தெம்பு வந்தது போல் இருக்கும். தொழில், வியாபாரம், பணியில் இருந்த சங்கடங்கள் விலகும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். அரசியல்வாதிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவரது ஏழாம் பார்வை உங்கள் குடும்ப, தன ஸ்தானத்திற்கு உண்டாவதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவர்.  பெண்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி பெறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்கல்வி முயற்சி நிறைவேறும்.சந்திராஷ்டமம்: ஜூன் 7, 8அதிர்ஷ்ட நாள்: மே 15, 22, 24, 31, ஜூன் 4, 6. 13பரிகாரம்: வராகியம்மனை வழிபட்டால் வாழ்வு வளமாகும்.விசாகம் 1,2,3 ம் பாதம்; தனக்காரகனான குரு, அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு நினைத்ததை சாதிக்கும் சக்தி இயல்பாக இருக்கும். பிறக்கும் வைகாசி மாதத்தை அதிர்ஷ்ட மாதம் என சொல்லலாம். உங்கள் நட்சத்திரநாதன் எட்டாம் இடத்தில் மறைவு பெற்றாலும் அவரது பார்வைகள் உங்கள் நிலையை உயர்த்தும். புதிய சொத்துடன் நவீன பொருட்களையும் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபிட்ச நிலை ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். ராகுவின் சஞ்சார நிலையால் அதிர்ஷ்டம் தேடிவரும். நீண்ட நாட்களாக தடைபட்ட முயற்சிகள் வெற்றி பெறும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இக்காலத்தில் பின்வாங்குவர். பொருளாதார நிலை மேம்படும். வியாபாரம், தொழிலில் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றி பெறும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெண்களுக்கு செய்யும் தொழிலில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். விவசாயிகள் நிலையில் இருந்த சங்கடம் விலகும். மாணவர்கள் எண்ணியது நிறைவேறும்.சந்திராஷ்டமம்: ஜூன் 8, 9அதிர்ஷ்ட நாள்: மே. 15, 21, 24, 30, ஜூன் 3, 6, 12பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட நன்மை அதிகரிக்கும்.

விசாகம் 4 ம் பாதம்: தைரிய காரகனான செவ்வாய், ஞானக் காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த நீங்கள் துணிச்சலும் அறிவாற்றலும் கொண்டவர்களாக இருப்பீர்கள். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் வாழ்வில் பொற்காலமாக இருக்கப் போகிறது. உங்கள் நட்சத்திர நாதன் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 7 ம் இடத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். குரு பார்க்க கோடி புண்ணியம் என்பதால் இது நாள் வரையில் உங்களுக்கிருந்த சங்கடங்கள் இப்போது விலகும். அந்தஸ்தும் கவுரவமும் உங்களை வந்து சேரும். வேலை வாய்ப்பு, புதிய தொழில் தொடங்குதல்,  தொழிலில் முன்னேற்றம், சொத்து சேர்க்கை என கனவெல்லாம் நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். 4 ம் இடத்துச் சனியின் 10 ம் பார்வை உங்கள் ராசிக்கு ஏற்பட்டு அதனால் உடல்நிலையில் பாதிப்படைந்து வந்த உங்களுக்கு குருவின் பார்வையால் உடல்நிலை சீராகும். வெளிநாட்டு முயற்சிகள், கூட்டுத்தொழில்கள் யாவும் இப்போது வெற்றியாகும். வருமானம் பல வகையிலும் வர ஆரம்பிக்கும். பெண்களுக்கு உடல்நிலை சீராகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.  அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். புதிய பதவி பொறுப்பு வந்து சேரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களின் மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும்.சந்திராஷ்டமம்: ஜூன் 9அதிர்ஷ்ட நாள்: மே 18, 21, 27, 30, ஜூன் 3, 12பரிகாரம்: ஆலங்குடி குருபகவானை வழிபட நன்மை அதிகரிக்கும்.அனுஷம்: ஆயுள்காரகனான சனி, சகோதரகாரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் சக்தி இருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்களுக்கு யோக மாதமாக இருக்கும். ஏழாம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு ஒருபக்கம், மாதத்தின் பிற்பகுதியில் 6ம் இடத்தில் சஞ்சரித்து உங்களுக்கு அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்கும் ராசிநாதன் மறுபக்கம், லாப ஸ்தான கேதுவால் யோகம் என இந்த மாதம் உங்களுக்கு முன்னேற்ற மாதமாக இருக்கப் போகிறது. உங்கள் நட்சத்திர நாதன் சனிபகவான் 4ல் சஞ்சரித்து அவரது 10 ம் பார்வையால் உடல், மனம், தொழில், உத்தியோகம், வருவாய் ரீதியாக  நெருக்கடிகளை அடைந்துவரும் உங்களுக்கு இனி விடுதலை உண்டாகும். நெருக்கடிகள் விலகும். உடல் நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். செல்வாக்கு உயரும். பெண்களுக்கு உடல் நிலையும், மனநிலையும் சீராகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். விவசாயிகள் விளைபொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கப் பெறுவர். மாணவர்களின் மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்:  மே 14, ஜூன் 9, 10அதிர்ஷ்ட நாள்: மே 17, 18, 26, 27, ஜூன் 8பரிகாரம்: குலதெய்வ வழிபாட்டால் குறையனைத்தும் நீங்கும்.கேட்டை; கல்விக்காரகனான புதன், ரத்தக் காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு வீரத்துடன் விவேகமும் நிறைந்திருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் வாழ்க்கையில் நன்மைகளை உண்டாக்கும் மாதமாக இருக்கும். இதுவரை நீங்கள் அடைந்து வந்த சங்கடங்கள் விலகி விடுதலை கிடைக்கும். உங்கள் நட்சத்திரநாதன் மாதத்தின் முற்பகுதியில் உங்களுக்கு நன்மை வழங்க, பிற்பகுதியில் ராசிநாதன் யோகத்தை உண்டாக்க உள்ளனர். புதிய இடம் வாங்குவது, ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது என உங்கள் எதிர்காலத்திற்குரிய நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். குரு பகவானின் பார்வைகள் லாப ஸ்தானம், ராசிக்கு உண்டாவதால் பொன்னும் பொருளும் சேரும். நெருக்கடிகள் விலகும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம். பதவி உயர்வு ஏற்படும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.. உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். வழக்குகள் சாதகமாகும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பெண்களுக்கு நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வந்து சேரும். விவசாயிகள் கவனமாக செயல்படுவதன் மூலம் லாபம் காண முடியும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  மாணவர்களின் மேற்கல்வி ஆசை பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: மே 14, 15, ஜூன் 10, 11அதிர்ஷ்ட நாள்: மே 14, 18, 23, 27, ஜூன் 5, 9பரிகாரம்: பெருமாளை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.

மூலம்: தனக்காரகனான குரு, ஞான மோட்சக்காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தெய்வீக சக்தியும் ஞானமும் நிறைந்திருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் நிலையில் மாற்றங்களை உண்டாக்கும் மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் 6 இடத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகளால் செய்து வரும் தொழிலில் ஆதாயம், வேலை வாய்ப்பு, புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி, உத்தியோகத்தில் முன்னேற்றம். வெளிநாட்டு வர்த்தகத்தில் லாபம் என்ற நற்பலன்களை உண்டாகும். 3 ம் இடத்தில் சனி சஞ்சரிப்பதால் தடைபட்ட முயற்சிகள் இனி வெற்றியாகும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நன்மையாகும். மாணவர்கள் மேற்படிப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி அடையும்.சந்திராஷ்டமம்: மே 15, 16, ஜூன் 11அதிர்ஷ்ட நாள்: மே 21, 25, 30, ஜூன் 3, 7, 12பரிகாரம்: பிள்ளையார்பட்டி விநாயகர் வழிபாட்டால் வாழ்வு வளமாகும். பூராடம்: ஞானக்காரகனான குரு, அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு அறிவாற்றலும் அதிர்ஷ்டமும் இயல்பாகவே இருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் வாழ்க்கையில் உயர்வினைக் காணும் மாதமாக இருக்கும். மாதத்தின் முற்பகுதியில் உங்கள் நட்சத்திர நாதன் சாதகமாக சஞ்சரிக்கும் நிலையில் மாதம் முழுவதும் உங்கள் பாக்கியாதிபதி சூரியன் ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் விருப்பங்கள் பூர்த்தியாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைத் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பணவரவு அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். அரசியல்வாதிகளின் விருப்பங்கள் நிறைவேறும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். எண்ணியது நிறைவேறும். விவசாயிகளின் விருப்பம் பூர்த்தியாகும். மாணவர்களின் மேற்கல்வி முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: மே 16, 17, ஜூன் 12அதிர்ஷ்ட நாள்: மே 15, 21, 24, 30, ஜூன் 3, 6பரிகாரம்: மகாலட்சுமி வழிபாட்டால் வெற்றி உண்டாகும். உத்திராடம் 1 ம் பாதம்: ஆற்றல்காரகனான சூரியன், தனக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு திட்டமிட்டு செயல்படும் திறமை இருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் நிலையில் உயர்வை உண்டாக்கும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திராதிபதி சூரியன் 6ம் இடத்திலும், சனிபகவான் 3ம் இடத்திலும் சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்பட்டுலாபம் அடைவீர்கள். நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியாகும். இதுவரையில் இருந்த தடைகள் விலக ஆரம்பிக்கும். தொழில், வேலை போன்றவற்றில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு புதிய வேலை அமையும். வெளிநாடு செல்லும் முயற்சி யோகத்தை உண்டாக்கும். குருவின் பார்வையால் குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும் பணவரவு அதிகரிக்கும். புதிய சொத்து சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். பெண்களுக்கு  குடும்பத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னைகள் விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவதுடன் எதிர்பார்த்த பொறுப்பையும் அடைவர். விவசாயிகள் கவனமாக செயல்படுவதால் நெருக்கடி விலகும். மாணவர்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: மே 17, 18, ஜூன் 13அதிர்ஷ்ட நாள்: மே 19, 21, 28, 30, ஜூன் 1, 3, 10, 12பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.

உத்திராடம் 2,3,4 ம் பாதம்: ஆயுள் காரகனான சனி, ஆத்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த நீங்கள் அனைத்திலும் முதன்மையானவராக இருப்பீர்கள். வைகாசி மாதத்தில் உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய இருக்கிறீர்கள். 3ல் சஞ்சரிக்கும் ராகு உங்கள் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்கி வரும் நிலையில் மாதத்தின் முற்பகுதியில் செவ்வாயும் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் நினைத்தவற்றை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாளாக முடியாமல் இருந்த பிரச்னைகள் இப்போது முடிவிற்கு வரும். இதுவரையில் இருந்த சங்கடங்கள் விலகி இனி நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகும். தொழில், உத்தியோகம் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்ப்பு நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.  சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். பெண்களுக்கு முயற்சிகள் வெற்றியாகும். தடைகள், தடுமாற்றம் என்ற நிலை மாறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் வரும். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். மாணவர்களின் கனவு பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: மே 17, 18, ஜூன் 13அதிர்ஷ்ட நாள்: மே 19, 26, 28, ஜூன் 1, 8, 10பரிகாரம்: சூரியனை தினமும் வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.திருவோணம்: ஆயுள்காரகனான சனி, மனக்காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு  எந்தவொரு செயலையும் தனித்து நின்று செய்து வெற்றியடையும் திறமை இருக்கும். பிறக்கும் வைகாசி முன்னேற்றத்தை உண்டாக்கும் மாதமாகும். குருபகவான் 5 ம் இடத்தில் சஞ்சரிப்பதுடன் அவரது பார்வையும் ராசிக்கு உண்டாவதால் 12 ஆண்டுக்குப் பிறகு யோக நிலையை நீங்கள் அடைய இருக்கிறீர்கள். இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடங்கள், நலிவுகள், பிரச்னைகள் எல்லாம் ஒவ்வொன்றாக உங்களை விட்டு விலகப் போகிறது. உங்கள் செல்வாக்கு, அந்தஸ்து யாவும் இப்போது உயரப் போகிறது. தொழிலில் இருந்த தடைகளும் பிரச்னைகளும் இருந்த இடம் தெரியாமல் போகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். முடியாமல் இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். விலகிப்போன உறவுகளும் இனி உங்களைத் தேடி வருவார்கள். அரசியல்வாதிகளுக்கும் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் புதிய பொறுப்பு, பதவி வந்து சேரும். செல்வாக்கு உயரும். வேலைத் தேடி வந்தவர்களின் முயற்சி பலிதமாகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பெண்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வாழ்வில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். பொன், பொருள், பூமி சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். மாணவர்கள் சிலருக்கு வெளிநாட்டில் மேற்கல்வி பயிலும் முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: மே 18, ஜூன் 14அதிர்ஷ்ட நாள்: மே 17, 20, 26, 29, ஜூன் 2, 8, 11பரிகாரம்:  தினமும் சந்திர பகவானை வழிபட முயற்சி வெற்றியாகும்.அவிட்டம் 1,2 ம் பாதம்:தைரிய காரகனான செவ்வாய், ஆயுள்காரகனான சனியின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்த ஒன்றிலும் தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி பெறும் திறமை இருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் செவ்வாய் 3 ல் சஞ்சரிப்பதால் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ராகு பகவானும் அங்கே இணைந்திருப்பதால் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். இந்த நிலையில் குருபகவானும் 5ல் சஞ்சரித்து உங்களுக்கு அதிர்ஷ்டங்களை வழங்க இருப்பதால் உங்கள் வாழ்க்கையில்  இருந்த சங்கடங்கள் விலகும். அலுவலகப் பணியில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். தொழிலாளிகளுக்கு ஊதியம் அதிகரிக்கும். மதிப்பு உயரும். குடும்பத்தில் சந்தோஷமான நிலை ஏற்படும். பலவழிகளிலும் பணம் வர ஆரம்பிக்கும். இதுவரை நிறைவேறாமல் இருந்த முயற்சி யாவும் இனி வெற்றியாகும். பெண்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பிள்ளைகளால் தோன்றிய கவலைகள் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயம் அளிக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். அரசியல்வாதிகள் எண்ணம் பூர்த்தியாகும். விவசாயிகள் எதிர்பார்த்த வருமானத்தை அடைவர். மாணவர்கள் மேற்கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: மே 19அதிர்ஷ்ட நாள்: மே 17, 18, 26, 27, ஜூன் 8, 9பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் சங்கடங்கள் விலகும்.

அவிட்டம் 3,4 ம் பாதம்: தொழில்காரகனான சனி, தைரியக்காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த நீங்கள் உழைப்பால் உயரக் கூடியவர்களாக இருப்பீர்கள். வைகாசி மாதம் உங்கள் முயற்சிக்கேற்ற பலன்களை வழங்கும் மாதமாக இருக்கும். உங்கள் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி 3, 7, 10 ம் இடங்களைப் பார்ப்பதால் உங்கள் தைரியத்தில் குறைபாடு, வாழ்க்கைத்துணையுடன் பிரச்னை, நட்புகளுக்குள் சங்கடம், தொழிலில் முன்னேற்றமில்லா நிலை என்று சங்கடங்களை நீங்கள் சந்தித்து வரும் நிலையில் 4ல் சஞ்சரிக்கும் குரு உங்கள் ஜீவன ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். வேலை தேடி வந்தவர்களின் முயற்சி நிறைவேறும். மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாய் 3 ல் ஆட்சியாக சஞ்சரிப்பதால் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். தடைபட்ட செயல்கள் நடந்தேறும். அரசியல்வாதிகள் இக்காலத்தில் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பதால் விருப்பங்கள் நிறைவேறும். பணியாளர்களுக்கு இதுவரை இருந்த சங்கடங்கள் நீங்கும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வாக்கு ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம். வரவு செலவுகளில் எச்சரிக்கை வேண்டும். பெண்களின் விருப்பம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவதும் அவசியம். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். மாணவர்கள் மேற்கல்வி முயற்சியில் கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: மே 19அதிர்ஷ்ட நாள்: மே 17, 18, 25, 27, ஜூன் 8, 9பரிகாரம்: அனுமனை வழிபட்டால் தடையனைத்தும் விலகும். சதயம்:யோகக்காரகனான ராகு, ஆயுள்காரகனான சனியின் அம்சத்தில் பிறந்த நீங்கள், உழைப்பால் முன்னேற்றம் அடைவீர்கள். பிறக்கும் வைகாசி மாதத்தில் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நட்சத்திரநாதன் ராகு குடும்ப ஸ்தானத்திலும், ராசிநாதன் ஜென்மத்திலும், 8 ல் கேதுவும் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் என எல்லாவற்றிலும் இழுபறி இருக்கும். முதலீடுகள் தேக்கமடையும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும், 4 ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 8 ம் இடத்திலும், அங்கு சஞ்சரிக்கும் கேதுவின் மீதும் பதிவதால் உடல் பாதிப்பு நீங்கும். மறைந்த செல்வாக்கு மீண்டும் உயரும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் உண்டாகும். 10 ம் இடத்திற்கும் குருவின் பார்வை உண்டாவதால் தொழிலில் இருந்த தடைகள் விலகும். வருமானம் உயரும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாய் 3ல் இருப்பதால் முயற்சி வெற்றியாகும். நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பெண்கள் நிதானமாக செயல்படுவது அவசியம். குடும்ப நலனில் கூடுதலாக அக்கறை செலுத்துவதுடன் உங்கள் உடல் நிலையிலும், வாழ்க்கைத்துணையின் உடல் நிலையிலும் கவனம் வேண்டும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. விவசாயிகளுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும். மாணவர்கள் முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: மே 20.அதிர்ஷ்ட நாள்: மே 17, 22, 26. 31, ஜூன் 4, 8, 13பரிகாரம்: காளிகாம்பாளை மனதில் நினைத்து வழிபட சங்கடம் நீங்கும்.பூரட்டாதி 1,2,3 ம் பாதம்: தனக்காரகனான குரு, ஆயுள்காரகனான சனி பகவானின் அம்சத்தில் பிறந்த நீங்கள் நினைத்ததை சாதிக்கும் திறமையுடன் இருப்பீர்கள். பிறக்கும் வைகாசி மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் 4ல் சஞ்சரித்து ராசிக்கு அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானங்களைப் பார்ப்பதால், இதுவரையில் இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலகும். தொழிலில் தடைகள் நீங்கும். உடல் பாதிப்புகள் குறையும். விரயங்கள் கட்டுப்படும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாய் 3ல் ஆட்சி பெறுவதால் முயற்சி யாவும் வெற்றியாகும். உழைப்பின் மீது அக்கறை உண்டாகும். பொருளாதாரம் உயரும். அதே நேரத்தில் ஜென்ம ஸ்தானத்தில் சனியும், வாக்கு ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிப்பதை மனதில் கொண்டு செயல்படுவதால் சங்கடங்கள் இல்லாமல் போகும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. வியாபாரம் தொழிலில் இக்காலத்தில் கவனம் செலுத்துவதால் லாபம் கூடும். உத்தியோகம், வேலைகளில் விழிப்புணர்வு தேவை. பெண்கள் நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் பிரச்னைகள் இல்லாமல் போகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். விவசாயிகள் சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் மேற்படிப்பிற்காக கூடுதல் முயற்சி மேற்கொள்வது அவசியம்.சந்திராஷ்டமம்: மே 21அதிர்ஷ்ட நாள்: மே 17, 26, 30 ஜூன் 3, 8,12பரிகாரம்: வியாழன் தோறும் குருபகவானை வழிபட்டால் வாழ்வு வளமாகும்.

பூராட்டாதி 4 ம் பாதம் : ஞானக்காரகனான குரு பகவானின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, சமூகத்தில் அந்தஸ்தும் செல்வாக்கும் இருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் நிலையில் சில மாற்றங்களை உண்டாக்கும் மாதமாகும். ராசிக்குள் ராகு, ஏழில் கேது, விரயத்தில் சனி என நெருக்கடிகளை உண்டாக்கினாலும், 3ல் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதனின் பார்வைகள் 7, 9, 11 ம் இடங்களுக்கு உண்டாவதால் தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவர். திருமண வயதினருக்கு வரன் அமையும். பெரியோரின் ஆசி, தெய்வ அனுகூலம் உண்டாகும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். பணம் பலவழிகளிலும் வர ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். சுபிட்சங்கள் அதிகரிக்கும். தொழில், பணியில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த பணவரவுகள் இருக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்கு புதிய இடம் வாங்கும் நிலை உண்டாகும். அரசியல்வாதிகள் நிதானம் காப்பது நல்லது. விவசாயிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்தினரையும் வாழ்க்கைத் துணையையும் அனுசரித்துச் செல்வதால் நன்மையுண்டாகும். மாணவர்கள் விடாமுயற்சி, கூடுதல் கவனம் செலுத்துவதால் மேற்கல்வி முயற்சி நிறைவேறும்.சந்திராஷ்டமம்: மே 21அதிர்ஷ்ட நாள்: மே 30, ஜூன் 3, 12பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.உத்திரட்டாதி: கர்மக்காரகனான சனி, ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த நீங்கள் வாழ்க்கையின் ஒவ்வொன்றிலும் தடைகளை சந்தித்து வருபவர்களாக இருப்பீர்கள். பிறக்கும் வைகாசி மாதம் உங்களுக்கு மாற்றங்களை உண்டாக்கும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் விரய ஸ்தானத்தில், ராசிநாதன் மறைவு ஸ்தானமான 3ல் சஞ்சரிக்கும் நிலையில் யோசிக்காமல் செலவுகள் செய்து சங்கடங்களுக்கு ஆளாக வேண்டிய நிலை உருவாகும். என்றாலும், வாரத்தின் முற்பகுதியில் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் பணத்தேவையை பூர்த்தி செய்வார். பொன், பொருட்களை வாங்க வைப்பார். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகத்தை வழங்குவார். 3ல் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். நெருக்கடிகளில் இருந்து விடுவிப்பார். குருவின் பார்வைகளால் உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். குடும்பத்தில் சுபிட்சம் தோன்றும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். கடன்கள் அடைபடும். வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கோயில்களுக்கு சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். பெண்களுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு அதிகரிக்கும். இளம் பெண்களுக்கு திருமண யோகம் உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது அவசியம். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: மே 22அதிர்ஷ்ட நாள்: மே 17, 21, 26, 30, ஜூன் 3, 8, 12பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.ரேவதி: கல்விக்காரகனான புதன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த நீங்கள் சிந்தித்து செயல்படக் கூடியவராக இருப்பீர்கள். பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் செயல்களால்  முன்னேற்றம் அடையும் மாதமாக இருக்கும். 3ல் சஞ்சரிக்கும் சூரியன் மாதம் முழுவதும்  நன்மை வழங்குவார். உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். அரசு வழி செயல்களை நிறைவேற்றித் தருவார். உங்களை வேகமாக செயல்பட வைப்பார். குருவின் பார்வைகளால் பணவரவு அதிகரிக்கும்.  பொன், பொருள் சேரும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு அதிகரிக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும், வீடு வாசல், சொத்து சுகம் உண்டாகும். பெண்களுக்கு இதுவரை இருந்த சங்கடங்கள் விலகும். குருவின் பார்வையால் நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்களைப் புரிந்து கொண்டு ஆதரவாக இருப்பார். திருமண வயதினருக்கு மாங்கல்ய யோகம் உண்டாகும்.  அரசியல்வாதிகள் இக்காலத்தில் அவசர முடிவுகளை மேற்கொள்வதால் எதிர்மறையான பலன்களே ஏற்படும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களின் மேற்படிப்பு முயற்சி நிறைவேறும்.சந்திராஷ்டமம்: மே 23, 24அதிர்ஷ்ட நாள்: மே 14, 21, 30. ஜூன் 3, 5. 12. 14பரிகாரம்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளை வழிபட நன்மை உண்டாகும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement


    • Dinamalar Events


    Dinamalar