உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மும்பையில் அட்லி மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்

மும்பையில் அட்லி மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்

விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கியவர் அட்லி. இந்த மூன்று படங்களையுமே ஹிட்டாக கொடுத்தார். அதன் பிறகு ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கிய அட்லி தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் தனது ஆறாவது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. மேலும், ஜவான் படத்திற்கு பிறகு அட்லி மும்பையில் குடியேறிவிட்டார் . இந்த நிலையில் அட்லியின் மனைவி பிரியா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் அட்லி, பிரியா தம்பதிக்கு ஏற்கனவே 3 வயதில் மீர் என்ற ஒரு மகன் இருக்கிறான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

கனோஜ் ஆங்ரே, மும்பை
2026-03-22 10:58:49

விஜய்...யின் இந்த செயல் தற்குறித்தனமாக தெரியவில்லையா? ஏய்யா, உன் படத்தை டைரக்ட் பண்ண ஒருத்தன்.. மும்பைல போய் செட்டில் ஆயிடுவானாம்... அவனுக்கு 2வது புள்ள பொறக்குறதுக்கு முன்னாடி நடக்குற வளைகாப்புல இவர் தனி விமானத்தில் பயணம் செஞ்சி... அந்த விழாவில் கலந்து கொள்வாராம்? உலகத்திலேயே முதல் குழந்தை பொறக்குறதுக்கு முன்னாடிதான்யா வளைகாப்பு நடத்துவாங்க.. பத்து புள்ள பொறந்த பத்து பிள்ளை பொறக்குறதுக்கு முன்னாடி வளைகாப்பு நடத்துவாங்களா? இது என்னடா புதுசா இருக்கு? இவன் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்து 41பேர் செத்துபோனவன் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க போக முடியலை. இரண்டாவது புள்ளை பொறக்குற வளைகாப்புக்கு மும்பைக்கு போக முடியுதா? தமிழ்நாட்டு மக்களை எந்தளவிற்கு கேவலப்படுத்துறார் பாரு இவர்? இவர் முதலமைச்சர் ஆகி...? ஜெயலலிதாவைவிட விட ஆணவம் பிடிச்சவர் போலிருக்கு இவர்...?


angbu ganesh, chennai
2026-03-24 17:22:50

அதன் சொல்லிட்டீங்களே தற்குரின்னு இவர் என்னமோ அரசியல்னா சினிமான்னு நெனச்சிட்டு ரொம்ப விளையாட்டு புள்ளய இருக்கார், இல்ல இவர நம்பி கொடிபிடிக்கும் இவர் பின்னாடியே அலையும் தற்க்குறீங்களா வெறுப்பேத்தறானன்னும் தெரியல இப்போ எல்லாம் புஸ்சி ஆனந்த வெளில வர்ரதில்ல என்ன நடக்குதோ ஒரு சீட்டு கூட தேறாது போல