நுாறுசாமி கதை உருவானது எப்படி?
ADDED : 12 hours ago
இயக்குனர் சசியின் நுாறுசாமி எப்போது ரிலீஸ் என்பது முடிவாகவில்லை. இந்த மாதம் வரலாம் என தகவல். ஜனநாயகன் ரிலீஸ் தேதிக்காக அவர்கள் வெயிட்டிங். இந்நிலையில் படம் குறித்து பேசியுள்ள சசி ''கள்ளக்குறிச்சியில் நடந்த ஒரு உண்மை சம்பவமே கதை. அது குறித்து ஒரு தனியார் டாக் ஷோவில் பேசினார்கள். அப்போது இந்த கரு உருவானது. இதில் ஹீரோயின் சுவாசிகாவுக்கு அதிக சீன். ஆனாலும், எனக்காக, கதைக்காக நடித்தார் விஜய் ஆண்டனி. நான் இயக்கிய படங்களில் பூ, பிச்சைக்காரன் இன்றும் பேசப்படுகிறது. இந்த படத்தின் கதையும் அப்படியே. இந்த படம் பார்த்த பலர் தங்கள் உறவு பெண்ணுக்கு அதை செய்து இருக்கலாமே என நினைப்பார்கள்' என பேட்டி கொடுத்துள்ளார். நுாறுசாமி படத்தின் கதை மறுமணம், விதவை திருமணத்தை ஆதரிக்கும் கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.