சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி
முன்னணி நடிகர்கள், பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நிறுவனங்கள் தயாரித்த படங்களுக்கு பண்டிகை நாட்கள் அல்லது சாதாரண நாட்களில் கூடுதலாக ஒரு காட்சி இயக்க தமிழக அரசு அனுமதி வழங்குவது வழக்கம். அதன்படி மே 14ம் தேதி வெளியாகியுள்ள சூர்யாவின் கருப்பு படத்திற்கு மே 14, 15 வியாழன் வெள்ளி ஆகிய இரு நாட்கள் மட்டும் கூடுதலாக ஒரு காட்சியை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ‛‛படத்தை தயாரித்த டீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று மே 14, 15 ஆகிய இரு நாட்கள் கூடுதலாக ஒரு காட்சி இயக்க அனுமதி வழங்கப்படுகிறது. கூட்ட நெரிசல் இல்லாமல் சுகாதாரத்தோடு காட்சிகள் இயக்க வேண்டும்'' என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருப்பு படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க, சூர்யா, திரிஷா நடித்துள்ளனர். விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றுடன் வழங்கப்படும் முதல் சிறப்பு காட்சி அனுமதி இதுவாகும். இந்த அனுமதி மூலம், கூடுதலாக ஒரு காட்சி மூலம் தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல் ஐந்து காட்சிகளை இயக்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் பிரண்ட்ஸ் நேருக்கு நேர் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.