எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்'
இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி தயாரிப்பில், களவாணி சற்குணம் இயக்கத்தில் துஷாரா விஜயன், அதிதி பாலன் நடித்த எக்ஸாம் என்ற வெப்சீரியஸ், மே 15ல் ரிலீஸ் ஆகிறது. வெப்சீரிஸ் குறித்து சற்குணம் கூறுகையில் 'கடந்த பல ஆண்டுகளாக குரூப் 1 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன. அதை இந்த வெப்சீரிசில் காண்பிக்கிறேன். எந்த ஆட்சி, எந்த ஊர் என்பதை வெளிப்படையாக சொல்லவில்லை. ஊர் பெயர்களை கூட மாற்றியுள்ளோம். நாங்கள் எதிர்பார்த்தபடியே கதை வந்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி மூலமாக வெளிப்படையான போட்டி தேர்வு நடக்கும் என தமிழக முதல்வர் விஜய் தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். கடந்த காலங்களில் நடந்த முறைகேடு இனி நடக்காது என நம்புகிறோம். கடந்த 30 ஆண்டுகளில் நடந்த தவறுகள் இனி நடக்காது என நம்புகிறோம். அந்த முறைகேடு தொடர்பு பல வழக்குகள் இன்றும் நடந்து கொண்டு இருக்கின்றன. தயாரிப்பு நிறுவனத்தால் சில முறைகேடுகளை வெளிப்படையாக சொல்ல முடியாது' என்றார்.
நடிகை துஷாரா பேசகையில், ‛‛இந்த வெப்சீரிஸ் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. நான் நடித்த சார்பட்டா பரம்பரை ஓடிடியில் வெற்றி பெற்றது. இதுவும் ஓடிடியில் வருகிறது. இந்த வெப்சீரிஸ் ஆக் ஷன் காட்சிகளை பார்த்துவிட்டு நடிகை விஜயசாந்தி உடன் ஒப்பிட்டு பேசியது மகிழ்ச்சி. ஒரு ஹீரோவுக்கு ஒரு இயக்குனர் வெற்றி படம் கொடுத்தால் அவருக்கு பரிசு பொருட்களை அவர் கொடுப்பார். வாட்ச், செயின், பைக், கார் என இயக்குனர் சற்குணம் எதை கேட்டாலும் அவருக்கு நான் கொடுப்பேன்'' என்றார்.