ஊடகங்களை எச்சரிக்கும் சுள்ளான் நடிகர்
ADDED : 11 hours ago
மனைவியை பிரிந்து விட்ட, சுள்ளான் நடிகர் குறித்து, ஊடகங்களில் கிசுகிசுக்கள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி தன்னை பற்றி வெளியாகும் செய்திகளை பார்த்து, கடும் கொந்தளிப்பில் காணப்படும் சுள்ளான், சமீபத்தில், தன்னை சந்தித்த சில ஊடகவியலாளர்களிடம், 'வெளியுலகில் யாருமே ஆண்கள், பெண்களுடன் நட்பாக பழகுவது இல்லையா. சினிமாக்காரர்கள் பழகினால் மட்டும் ஏன் அதை தவறான கோணத்தில் பூதக்கண்ணாடி போட்டு பார்க்கிறீர்கள். இனிமேல், சக நடிகையருடன் என்னை இணைத்து யார் செய்தியை பரப்பினாலும், அந்த ஊடகங்கள் மீது, சைபர் கிரைமில் புகார் அளிப்பேன்...' என்று எச்சரித்துள்ளார், சுள்ளான்.