Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/கரிசனம் காட்டியிருக்கலாமே?

கரிசனம் காட்டியிருக்கலாமே?

கரிசனம் காட்டியிருக்கலாமே?


PUBLISHED ON : ஜன 03, 2024 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஜன 03, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எவ்வளவோ கெஞ்சியும் மனம் இரங்கவில்லையே...' என கவலைப்படுகிறார், ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா.

இங்கு, ஏற்கனவே இரண்டு முறை முதல்வராக பதவி வகித்தவர், வசுந்தரா. குவாலியர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சமீபத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, பா.ஜ., வெற்றி பெற்றால், தனக்குத் தான் முதல்வர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்.

ஆனால், பஜன்லால் சர்மா என்ற புதுமுகத்தை முதல்வராக அறிவித்து விட்டது, பா.ஜ., மேலிடம். இந்த கவலையை வசுந்தரா வெளியில் காட்டவில்லை என்றாலும், கட்சியில் உள்ள தன் தீவிர விசுவாசிகளை அழைத்து தினமும் புலம்புகிறார்.

'ஐந்து ஆண்டுகள் இல்லை என்றாலும், முதல் ஒரு ஆண்டு மட்டுமாவது முதல்வராக இருக்க அனுமதியுங்கள். அதன்பின், கவுரவமாக அரசியலில் இருந்து நானே ஒதுங்கிக் கொள்கிறேன் என மேலிட தலைவர்களிடம் கெஞ்சினேன். ஆனாலும், என்னை புறக்கணித்து விட்டனர்...' என, கண்ணீருடன் கூறியுள்ளார், வசுந்தரா.

'உள்ளூரில் செல்வாக்கு பெற்ற இவரிடம், கட்சி மேலிடம் கொஞ்சம் கரிசனம் காட்டியிருக்கலாம்...' என அனுதாபப்படுகின்றனர், வசுந்தராவின் விசுவாசிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap