PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளிர்விக்கும் பென்குயின்
அண்டார்டிகா பனி பிரதேசத்தில் லட்சக்கணக்கான பென்குயின் பறவைகள் வாழ்கின்றன. இந்நிலையில் இப்பறவைகள் அண்டார்டிகா காலநிலையை
குளுமையாக வைத்திருக்க பங்களிப்பு வழங்குகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பென்குயின் பறவைகளின் எச்சத்தில் இருந்து வெளியாகும் அம்மோனியா வாயு, கடல் நீரில் வளரும் நுண்ணுயிர்களான பைட்டோபிளாங்டனில் இருந்து வரும் கந்தக
சேர்மத்துடன் இணைந்து, பனி போன்ற நீர்துளிகளை உருவாக்குகிறது. இது சூரிய ஒளியுடன் பிரதிபலித்து தாழ்வான மேகங்களை உருவாக்குகிறது.