Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய இரட்டையர்

ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய இரட்டையர்

ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய இரட்டையர்


UPDATED : மே 11, 2024 08:59 AM

ADDED : மே 11, 2024 08:50 AM

Follow on Google

UPDATED : மே 11, 2024 08:59 AM ADDED : மே 11, 2024 08:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சேவூர் ரோடு, சூளையில் உள்ள சோலை நகர் குடியிருப்பில் வசிப்பவர் முருகமணி, 39, பனியன் ஆடை ஏற்றுமதி நிறுவன டெய்லர். இவருக்கு இரட்டையர்களான சபரிஸ்ரீ, ஹரிணி என இரு மகள்கள் உள்ளனர்.

இவர்கள், அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் இருவரும், 484 என ஒரே மதிப்பெண் பெற்று, பள்ளி இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

இரட்டையர் சபரிஸ்ரீ, ஹரிணி ஆகியோர் கூறுகையில், 'எங்கள் தந்தை முத்துக்குமரன், 10 ஆண்டுகள் முன்பு இறந்தார். இருவரையும் படிக்க வைப்பதற்கு எங்கள் தாய் சிரமப்பட்டார். தாயின் கஷ்டங்களை உணர்ந்து, இருவரும் படிப்பில் கவனம் செலுத்தினோம்.

'அதனால், அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் மதிப்பெண்கள் எடுத்துள்ளோம். பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள் என அனைவரும் உறுதுணையாக இருந்தனர்' என்றனர்.

சாதித்த இரட்டை சகோதரிகளை, அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியை புனிதவதி, பள்ளி வளர்ச்சிக்குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்பினர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap