sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : செப் 10, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 10, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செப்டம்பர் 10, 1862



திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டிக்கு அருகில் உள்ள பின்னத்துார் கிராமத்தில், அப்புசாமி ஐயர் - சீதாலட்சுமி தம்பதியின் மகனாக, 1862ல் இதே நாளில் பிறந்தவர் நாராயணசாமி ஐயர்.

இவர், தன் தந்தையிடம் சமஸ்கிருதத்தையும், ஒரே நேரத்தில் பல விஷயங்களை நினைவில் நிறுத்தும் அவதான கலையையும் கற்றார். துவக்க கல்வியை, கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணை பள்ளியில் படித்தார். தொடர்ந்து வேதங்களையும், தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் மொழி அறிஞர்களிடம் கற்று, கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார்.

அங்கு பணியாற்றிய தி.வை.சதாசிவ பண்டாரத்தார் உள்ளிட்டோருடன் பழகியதால், 'நற்றிணை' உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதினார்.

புதுக்கோட்டை சமஸ்தானம் பற்றி இவர் எழுதிய, 'இயன்மொழி வாழ்த்து' நுால், அம்மாவட்டத்தின் ஆவணமாக உள்ளது. சமஸ்கிருதத்தில் காளிதாசன் எழுதிய, 'பிரகசன' என்ற நாடக நுாலை தமிழில் மொழிபெயர்த்தார். மேலும், 'இடும்பாவன புராணம், சிவ புராணம், மருதப்பாட்டு' உள்ளிட்ட நுால்களை எழுதி வெளியிட்ட இவர், தன் 52வது வயதில், 1914, ஜூலை 30ல் மறைந்தார்.

இவரது பிறந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us