/
புகார் பெட்டி
/
திருப்பூர்
/
உழவர் சந்தை முன் பல்லாங்குழி சாலை
/
உழவர் சந்தை முன் பல்லாங்குழி சாலை
ADDED : செப் 14, 2025 11:58 PM

பகலிலும் 'பளிச்'
நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி வீதியில் பகலில் தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது.
- வின்சென்ட் ராஜ், ராயபுரம்.
அபாய மின்கம்பம்
பி.என்., ரோடு மில்லர் பஸ் ஸ்டாப்பில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் விழும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சரவணகுமார், மில்லர் பஸ் ஸ்டாப்.
குடிநீர் வீண்
ராம் நகர் 3வது வீதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தொடர்ந்து வெளியேறி சாக்கடையில் கலந்து வீணாகி வருகிறது. - ஈஸ்வரன், ராம் நகர்.
n பலவஞ்சிபாளையம், காளிகுமாரசாமி கோவில் எதிரில் குழாய் சேதமடைந்து, மூன்று நாட்களாக குடிநீர் வெளியேறி ரோட்டில் தேங்கி நிற்கிறது.
- காயத்ரி, பலவஞ்சிபாளையம்.
கால்வாய் ஆக்கிரமிப்பு
எம்.எஸ்., நகர் 2வது வீதியில் உள்ள சாக்கடை கால்வாய் மீது, இரும்பு கம்பிகளை போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கால்வாயை சுத்தம் செய்ய முடிவதில்லை.
- ராஜேந்திரன், எம்.எஸ்., நகர்.
விபத்து அபாயம்
எம்.எஸ்., நகர் நால் ரோட்டில் சந்திரா காலனியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டடம், பக்கவாட்டு சுவர் சேதமடைந்து, விழும் அபாயத்தில் உள்ளது.
- ரஞ்சித், திருப்பூர்.
ரோடு மோசம்
தென்னம்பாளையத்தில் இருந்து ஏ.பி.டி., ரோடு செல்லும் சாலை உழவர் சந்தை முன், குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. - செல்வராஜ், மீனாம்பாறை.
n தோட்டத்துப்பாளையம் ராக்கியாகவுண்டன் புதுார், கணபதி நகரில் தார் ரோடு போடாமல், காலம் கடத்தி வருகின்றனர். - சந்திரசேகரன், தோட்டத்துப்பாளையம்.