/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரூ.1 கோடி நலத்திட்ட உதவி ஜமாபந்தியில் வழங்கல்
/
ரூ.1 கோடி நலத்திட்ட உதவி ஜமாபந்தியில் வழங்கல்
PUBLISHED ON : ஜூன் 04, 2025 12:00 AM
திருத்தணி:திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி விழா, கடந்த மாதம் 20ம் தேதி துவங்கி, நேற்று வரை நடந்தது. நிறைவு விழா கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி வரவேற்றார்.
இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, இலவச வீட்டுமனை கணினி பட்டா, உட்பிரிவு பட்டா மாற்றம், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டு பேருக்கு இயற்கை மரணம் உதவித் தொகை, பல்வேறு சான்று என, மொத்தம் 226 பயனாளிகளுக்கு, 1.05 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ஜமாபந்தியில், மொத்தம் 549 மனுக்கள் பெறப்பட்டு, 306 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 243 மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில், திருத்தணி தாசில்தார் மலர்விழி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வெண்ணிலா, ஆதிதிராவிடர் நல தாசில்தார் மதியழகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

