Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ போலீஸ்காரரை மிரட்டிய ஐவர் கைது

போலீஸ்காரரை மிரட்டிய ஐவர் கைது

போலீஸ்காரரை மிரட்டிய ஐவர் கைது


PUBLISHED ON : ஏப் 08, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஏப் 08, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமங்கலம்திருமங்கலம், பாடிகுப்பம் சுடுகாடு அருகில் 10 பேர், மது அருந்தி கொண்டிருந்தனர். அங்கு சென்ற, திருமங்கலம் போலீஸ்காரர் வசந்தராஜா, அவர்களிடம் விசாரித்தார்.

அப்போது, மது போதையில் இருந்த அவர்கள், வசந்தராஜாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

அப்போது, போலீஸ் ரோந்து வாகனம் அவ்வழியாக வந்ததால், அனைவரும் தப்பி ஓடினர். திருமங்கலம் போலீசார் விசாரித்து, அத்திப்பட்டு, ஐ.சி.எப்., காலனியைச் சேர்ந்த யுவராஜ் 20, நந்தகுமார், 22, பாடிகுப்பம் சுதீஷ், 23, 'டிங்கு' பாலாஜி, 28, அரும்பாக்கம் தாமஸ், 28, ஆகிய ஐவரை, நேற்று கைது செய்தனர்.

விசாரணையில் மூவர் பழைய குற்றவாளிகள் என்பதும், யுவராஜ் மீது எட்டு வழக்குகளும், சுதீஷ் 5 வழக்குகளும், பாலாஜி மீது 15 வழக்குகளும், நந்தகுமார் மீது ஒன்பது வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. விசாரணை பின், ஐவரையும் நேற்று சிறையில் அடைத்தனர். வழக்கில் தொடர்புடைய மற்ற ஐந்து பேரை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap