/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : இந்தியாவின் உளவு அமைப்பு
/
தகவல் சுரங்கம் : இந்தியாவின் உளவு அமைப்பு
PUBLISHED ON : ஜூலை 03, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
இந்தியாவின் உளவு அமைப்பு
உள்நாட்டுக்குள் 'ஐ.பி.,' எனும் உளவுத்துறை இருப்பது போல, வெளிநாடுகளுக்கான இந்தியாவின் உளவு அமைப்பாக, 'ரா' எனும் ஆராய்ச்சி, பகுப்பாய்வு பிரிவு செயல்படுகிறது. இது 1968 செப். 21ல் தொடங்கப் பட்டது. தலைமையகம் டில்லி. இந்தியாவுக்கு எதிரான வெளிநாடுகளின் சதித்திட்டம் உள்ளிட்ட உளவு தகவல்களை சேகரித்தல், பயங்கரவாத எதிர்ப்பு, இந்திய அணுசக்தி திட்டங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் 'ரா' ஏஜன்ட்டுகள் ஈடுபடுகின்றனர். முதல் தலைவராக ரமேஷ்வர் நாத் கவ் (௧968 - 1977) இருந்தார். இதுவரை 25 பேர் இப்பதவியில் இருந்துள்ளனர்.