Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தனித்திறன் பழகு!

தனித்திறன் பழகு!

தனித்திறன் பழகு!


PUBLISHED ON : ஏப் 06, 2024

Follow on Google

PUBLISHED ON : ஏப் 06, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 1994ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...

தமிழாசிரியர் கருணாகரன் அன்று பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு, தனித்திறன் போட்டி அறிவிப்பு பற்றிய சுற்றறிக்கை வந்தது. அதை வாசித்து, 'போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் பெயரை பதிவு செய்யலாம்...' என்றார்.யாரும், முன் வரவில்லை. அனைவரும் அமைதி காத்தனர்.

இதை பார்த்ததும், 'பாடங்களை படிப்பதுடன் வாழ்வு நிறைவு பெற்று விடாது. உங்களுக்குள் தனித்திறன்கள் இருக்கும்; அது தான், எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க உதவும். அதனால், போட்டிகளில் பங்கேற்று, திறனை வெளிப்படுத்துங்கள். அதற்கு ஏதுவாக பயிற்சிகளில் ஈடுபடுங்கள்...' என்றார்.

ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்த அந்த அறிவுரை, மனதில் நம்பிக்கையை கிளறி விட்டது. கட்டுரை போட்டியில் பங்கேற்று, 2ம் பரிசு பெற்றேன். பின், ஒவ்வொரு ஆண்டும் அதை வழக்கமாக்கினேன்; வென்ற பரிசு கேடயங்களை பத்திரப்படுத்தி உள்ளேன்.தற்போது, என் வயது, 43; பத்திரிகைகளுக்கு, கதை, கவிதை மற்றும் துணுக்குகள் எழுதி வருகிறேன். எனக்குள் மறைந்திருந்த திறன்கள் வளர, அந்த தமிழாசிரியர் போட்டார் விதை. நன்றி என்ற நீர் ஊற்றி அதை நாளும் வளர்த்து வருகிறேன்.

- எம்.மகாலிங்கம், திருப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap