Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : பிப் 02, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 02, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப.சோமசுந்தரம், சென்னை: அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு மேடையில், முதல்வர் ஸ்டாலினின் பேரன் இன்பநிதியின் நண்பர்கள் அமர்வதற்காக, மாவட்ட கலெக்டரை எழுந்திருக்க சொன்னார்களாமே...

கலெக்டர்கள் அந்த அளவுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை!

* எல்.மூர்த்தி, கோவை: தமிழகத்தில், மக்கள் அமைதியாக வாழ்ந்து வருவதாக, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறாரே...

அப்படியா? எனக்குத் தெரியவில்லை; மக்களுக்கும் தெரியவில்லை!

ஏ.கே.சஞ்சீவிநாதன், ஈரோடு: இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும் என்பது விதியா?

இப்போதைக்கு அப்படித்தான்!

* பி.சுப்ரமணியன், கல்லிடைக்குறிச்சி: 'கடந்த மூன்று ஆண்டுகளில், 12 ஆயிரம் கோப்புகளில் கையெழுத்து போட்டு உள்ளேன்...' என, ஸ்டாலின் கூறி இருக்கிறாரே...

மிகப்பெரிய சாதனை தான் போங்க!

மு.நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்: 'அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்கு தான், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்...' என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, யோசனை தெரிவித்துள்ளாரே...

இவர் எவ்வளவு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்... தன் மகனையே, முதல்வர் ஆக்க முயற்சி செய்கிறாரே!

ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு: 'அஜித் வாழ்க... விஜய் வாழ்க... என சொல்லிக் கொண்டே இருந்தால், நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' என, ரசிகர்களைக் கேள்வி கேட்டு அசத்திய, அஜித் பற்றி...

சபாஷ்! நிதர்சனத்தை மிக நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்; இவர் தான், உண்மையான அரசியல்வாதி!

பி.எல்.பரமசிவம், மதுரை: பா.கே.ப., பகுதியில், அடிக்கடி வெளியாகும் வி.ஐ.பி., படங்களைத் தவிர்த்து, வாசகர்களுடன் எடுத்த படங்களையும் வெளியிடலாமே...

வாசகர் படங்கள், என்னுடன் சேர்ந்து வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன; பட விளக்கம் வெளியாகாததால், தெரிவதில்லை!

கீதா ராஜா, சென்னை: என்ன தான் கேள்விகளைப் படித்து விட்டு, பதில் எழுதுவது உங்களுக்கு இடப்பட்ட பணி என்றாலும், ஆயிரக்கணக்கில் வந்து குவியும் லெட்டர்களையும், 'இ-மெயில்'களையும் எப்படி பொறுமையுடன் கையாள்கிறீர்கள்?

இந்த உத்தியை எனக்கு சொன்னால், நான் பணி செய்யும் இடத்தில், நிறைய, 'இ-மெயில்'களைக் கையாள உதவுமே...

மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் பணியை மேற்கொண்டால், எதுவுமே எளிது தான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us