Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/திருநீறு பிரசாதம் வழங்காத சிவன் கோவில்!

திருநீறு பிரசாதம் வழங்காத சிவன் கோவில்!

திருநீறு பிரசாதம் வழங்காத சிவன் கோவில்!


PUBLISHED ON : பிப் 15, 2026

Follow on Google

PUBLISHED ON : பிப் 15, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீ காளஹஸ்தி காளத்திநாதர் ஆலயத்தில் திருநீறு வழங்கும் மரபு இல்லை. அதற்கு பதிலாக பச்சை கற்பூரத்தை பன்னீரில் கலந்து, அந்த தீர்த்தத்தை பிரசாதமாக சங்கு மூலம் பக்தர்களுக்கு வழங்குகின்றனர்

* திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு அருகில் உள்ள தேவிகா புரத்தில் மலை மீதுள்ள கனககிரீஸ்வரர் ஆலய கருவறையில், கனககிரீஸ்வரர், காசி விஸ்வநாதர் என, இரண்டு சிவ லிங்கங்கள் உள்ளன

* தஞ்சாவூரில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள தென்குடி திட்டத்தை வசிஷ்டேஸ்வரர் ஆலய கருவறை மேற் கூரையிலிருந்து, 25 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் இறைவன் திருமேனி மீது விழுந்து, இறைவனை நித்யாபிஷேகம் செய்யும் அற்புதம் நடக்கிறது

* ராமநாதபுரம் திருவாடானை ஆதிரத்னேஸ்வரர் கோவிலில் உள்ள வில்வ மரத்தின் கீழ் உள்ள மண் சாந்தை உருண்டையாக உருட்டி பிரசாதமாக தருகின்றனர். இதில், சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டால், கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை.

- ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us