sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை: சொந்தம்!

/

கவிதைச்சோலை: சொந்தம்!

கவிதைச்சோலை: சொந்தம்!

கவிதைச்சோலை: சொந்தம்!


PUBLISHED ON : மே 18, 2025

Google News

PUBLISHED ON : மே 18, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னஞ் சிறிய

குண்டூசி பல

தாள்களை இணைக்கிறது!

சிறிய ரப்பர் பேண்ட்

பல முடிக் கற்றைகளை

பறக்க விடாமல்

ஒருங்கிணைக்கிறது!

ஒரு துளி மை

பல பக்கங்களில்

தடையில்லாமல்

எழுதி விடுகிறது!

ஒரு குவளை தண்ணீர்

தொட்டிச் செடியை

மலர வைக்கிறது!

ஒரு பருக்கை சாதம்

பல எறும்புகளின்

பசி போக்கும்

வாழ்வாதாரமாகிறது!

ஒரு ஊசி மருந்து

பல நோய்களை

கட்டுப்படுத்தி

குணப்படுத்துகிறது!

இரண்டடி குறள்

காலமெல்லாம் மனித

வாழ்வியலுக்கு

பாடம் நடத்துகிறது!

கனிவான வார்த்தைகளும்

கள்ளமில்லா செயல்களும்

நல்ல எண்ணங்களும்

தேவையான அறிவுரைகளும்

உங்கள் சுற்றம் நட்பு

வட்டத்தில் உங்களை

மா மனிதர் எனும் நற்பெயரை

சொந்தமாக்கி விடும்!

— சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.தொடர்புக்கு : 94445 85858




    • Dinamalar Events


    Dinamalar