Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கடன் தொல்லையால் தாய், மகன் தற்கொலை

கடன் தொல்லையால் தாய், மகன் தற்கொலை

கடன் தொல்லையால் தாய், மகன் தற்கொலை


ADDED : ஏப் 01, 2025 08:09 AM

Follow on Google

ADDED : ஏப் 01, 2025 08:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொட்டபல்லாபூர்: கடன் தொல்லையால், தாய் தற்கொலை செய்து கொண்டதால், மனம் நொந்து மகனும் தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவின், கொனகட்டா கிராமத்தில் வசித்தவர் சந்திரிகா, 46. இவரது மகன் ரக்ஷித் பாபு, 24. இவர் ஸ்விக்கி, பைவ் ஸ்டார் உட்பட, பல்வேறு நிறுவனங்களில் டெலிவரி பாயாக பணியாற்றினார்.

இவரது குடும்பத்தினர் பலரிடம் கடன் வாங்கி, அடைக்க முடியாமல் அவதிப்பட்டனர். கடன் கொடுத்தவர்கள், வீட்டுக்கு வந்து தகராறு செய்ததால், சந்திரிகா அவமானம் அடைந்தார். ஒன்றரை மாதத்துக்கு முன்பு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாய் தற்கொலை செய்து கொண்டதால், மனம் நொந்த ரக்ஷித் பாபு, நேற்று காலை தொட்டபல்லாபூரின் நந்திமோரி அருகில் மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை இதை பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தொட்டபல்லாபூர் ஊரக போலீசார், அவரது உடலை மீட்டனர்.

வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap