sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

நுகர்வோர் புகார்கள் பதிவு செய்ய விரைவில் புதிய இணையதளம்

/

நுகர்வோர் புகார்கள் பதிவு செய்ய விரைவில் புதிய இணையதளம்

நுகர்வோர் புகார்கள் பதிவு செய்ய விரைவில் புதிய இணையதளம்

நுகர்வோர் புகார்கள் பதிவு செய்ய விரைவில் புதிய இணையதளம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''நுகர்வோரின் புகார்களை பதிவு செய்ய, புதிய இணையதளம் துவக்க பெஸ்காம் திட்டமிட்டுள்ளது,'' என, பெஸ்காம் நிர்வாக இயக்குனர் சிவசங்கர் தெரிவித்தார்.

கே.இ.ஆர்.சி., எனும் கர்நாடக மின் ஒழுங்குமுறை கமிஷன், பெங்களூரு மின் வினியோக நிறுவனம் அதிகாரிகள், ஊழியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. பெஸ்காம் நிர்வாக இயக்குநர் சிவசங்கர் பேசியதாவது:

நுகர்வோரின் புகார்களை பதிவு செய்ய, புதிய இணையதளம் துவக்க பெஸ்காம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக கர்நாடக மின் ஒழுங்குமுறை கமிஷன் உத்தரவின்படி, சி.ஜி.ஆர்.எப்., எனும் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் அமைக்கப்பட்டு உள்ளது.

புகார்கள் வந்தால், உடனடியாக குறிப்பிட்ட நேரத்துக்குள் அதை நிவர்த்தி செய்து, நம் சேவையின் தரத்தை அதிகரிக்க வேண்டும்.

மாவட்ட அளவிலான அமைக்கப்படும் மன்றத்தில், கண்காணிப்பு பொறியாளர், செயல் பொறியாளர்கள், உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர்.

சி.ஜி.ஆர்.எப்., அதிகாரிகள் வாடிக்கையாளர் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்கள் குறித்து கே.இ.ஆர்.சி.,யிடம் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.




    • Dinamalar Events


    Dinamalar