sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

யுகாதி, ரம்ஜானை முன்னிட்டு ஆம்னி பஸ் கட்டணம்... அதிகரிப்பு! 3 நாட்கள் தொடர் விடுமுறையால் பயணியர் பாதிப்பு

/

யுகாதி, ரம்ஜானை முன்னிட்டு ஆம்னி பஸ் கட்டணம்... அதிகரிப்பு! 3 நாட்கள் தொடர் விடுமுறையால் பயணியர் பாதிப்பு

யுகாதி, ரம்ஜானை முன்னிட்டு ஆம்னி பஸ் கட்டணம்... அதிகரிப்பு! 3 நாட்கள் தொடர் விடுமுறையால் பயணியர் பாதிப்பு

யுகாதி, ரம்ஜானை முன்னிட்டு ஆம்னி பஸ் கட்டணம்... அதிகரிப்பு! 3 நாட்கள் தொடர் விடுமுறையால் பயணியர் பாதிப்பு


ADDED : மார் 26, 2025 07:05 AM

Google News

ADDED : மார் 26, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடகாவின் தலைநகராக விளங்கும் பெங்களூரில் கல்வி, வேலை, வியாபாரம் என பல காரணங்களுக்காக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் உள்ளோர் வசிக்கின்றனர். இதனால், பெங்களூரு மக்கள் தொகையின் எண்ணிக்கை, 1.50 கோடியை நெருங்கி வருகிறது.

வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், நகர் முழுதும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

பெங்களூரில் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், மராத்தியர்கள் என பல மாநில மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர், பண்டிகை தினத்தன்று தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக வைத்து உள்ளனர். தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்களின் முக்கிய பண்டிகையான யுகாதி, வரும் 30ம் தேதி ஞாயிற்று கிழமையும், முஸ்லிம்களின் பண்டிகையான ரம்ஜான் வரும் 31ம் தேதி திங்கட் கிழமையும் வருகிறது.

பயண திட்டம்


யுகாதிக்கு முந்தைய தினம் சனிக்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால், மொத்தமாக மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால், வெள்ளிக்கிழமை இரவே அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

இதன் காரணமாக ரயில், பஸ்கள் என அனைத்திலும் டிக்கெட்டுகள் ஒரு மாதத்திற்கு முன்னரே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. ஊருக்கு போக வேண்டும் என நினைப்போர் ஆம்னி பஸ்கள் மூலமே, தங்கள் ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதை பயன்படுத்தி கொண்டு ஆம்னி பஸ் நிர்வாகத்தினர், டிக்கெட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர். இதனால், பயணியர் பலரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் நட்ராஜ் ஷர்மா கூறியதாவது:

ஆம்னி பஸ்களின் கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்படவில்லை. 50 முதல் 60 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் மாநில அரசே. நடப்பாண்டு பட்ஜெட்டில், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நலனுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை. மகளிருக்கு வழங்கப்படும் இலவச பஸ் பயணத்தால், தனியார் பஸ் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து உள்ளன.

மேலும், சாலை வரி, இன்சூரன்ஸ், பஸ்களின் விலை, உதிரி பாகங்கள் என அனைத்தின் விலையும் பல மடங்கு அதிகரித்து விட்டது. எனவே, பண்டிகை காலங்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us