sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

'அமைதியான நாட்டை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்., முயற்சிக்கிறது'

/

'அமைதியான நாட்டை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்., முயற்சிக்கிறது'

'அமைதியான நாட்டை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்., முயற்சிக்கிறது'

'அமைதியான நாட்டை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்., முயற்சிக்கிறது'


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரில், முதல்வர் சித்தராமையா, ஆர்.எஸ்.எஸ்., குறித்து விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், பெங்களூரில் நேற்று அகில பாரதிய பிரசார பிரமுகர் சுனில் அம்பேகர் அளித்த பேட்டி:

பெங்களூரு சென்னனஹள்ளி ஜனசேவா வித்யா கேந்திராவில் மார்ச் 21 முதல் 23 வரை ஆர்.எஸ்.எஸ்., அனைத்திந்திய பிரதிநிதிகள் கவுன்சில் கூட்டம் நடக்கிறது.

கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், தத்தாத்ரேயா ஹொசபெலே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உட்பட மூத்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதில், 2024 - 25ன் அறிக்கையை, தத்தாத்ரேயா ஹொசபெலே தாக்கல் செய்கிறார்.

கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., கொள்கை குறித்து விவாதிக்கப்படும். அமைப்பின் செயல்பாடுகள், வருங்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். ஆர்.எஸ்.எஸ்., குறித்து முதல்வர் சித்தராமையா என்ன பேசினார் என்று தெரியவில்லை

ஆனால் எங்களின் அமைப்பு துவங்கிய நாள் முதலே, அமைதியான நாட்டை உருவாக்கவே முயற்சித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.




    • Dinamalar Events


    Dinamalar