sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

எச்.டி.எப்.சி., வங்கி ஊழியர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது

/

எச்.டி.எப்.சி., வங்கி ஊழியர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது

எச்.டி.எப்.சி., வங்கி ஊழியர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது

எச்.டி.எப்.சி., வங்கி ஊழியர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது


ADDED : ஜன 18, 2024 11:34 PM

Google News

ADDED : ஜன 18, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: எச்.டி.எப்.சி., வங்கி, இரண்டு லட்சம் பணியாளர்கள் கொண்ட நாட்டின் எட்டாவது நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எப்.சி., அதன் விரிவாக்கத் திட்டங்களுக்காகவும், பணிவிலகல் விகிதங்களை கட்டுப்படுத்துவதற்காகவும், கடந்த ஆண்டு தீவிரமாக ஏராளமானோரை பணியமர்த்தும் முயற்சியை மேற்கொண்டது.

இதன் விளைவாக, கடந்த டிசம்பர் காலாண்டில், வங்கியின் பணியாளர்கள் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை தாண்டியது. மேலும், வங்கியில் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை, நான்கரை ஆண்டுகளில், கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இரண்டு லட்சம் பணியாளர்களை கொண்டதாக ஏழு நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது எட்டாவதாக எச்.டி.எப்.சி., வங்கி இணைந்துள்ளது. இதுகுறித்து, எச்.டி.எப்.சி., வங்கி தலைமை நிதி அதிகாரி ஸ்ரீனிவாசன் வைத்யநாதன் கூறியதாவது:

கடந்த டிசம்பர் காலாண்டில், வங்கியின் பணியாளர்கள் எண்ணிக்கை, 5.1 சதவீதம் அதாவது 10,167 பேர் அதிகரித்து, 2.08 லட்சமாக இருந்தது. செப்டம்பர் காலாண்டை தவிர்த்து, கடந்த ஒராண்டில், வங்கி அதன் அதிகபட்ச வளர்ச்சியை கண்டது.






      Dinamalar
      Follow us