/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
பொதுத்துறை வங்கிகள் அதிக கிளைகள் திறக்க வேண்டும்; மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்
/
பொதுத்துறை வங்கிகள் அதிக கிளைகள் திறக்க வேண்டும்; மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்
பொதுத்துறை வங்கிகள் அதிக கிளைகள் திறக்க வேண்டும்; மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்
பொதுத்துறை வங்கிகள் அதிக கிளைகள் திறக்க வேண்டும்; மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்
UPDATED : ஜூலை 01, 2025 11:39 AM
ADDED : ஜூலை 01, 2025 06:52 AM

புதுடில்லி: தனியார் வங்கிகள், சிறு நிதி வங்கிகளின் போட்டியைச் சமாளிக்கும் வகையில், கூடுதலாக வங்கிக் கிளைகளை திறக்குமாறு, பொதுத் துறை வங்கிகளை, மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, நிதி அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தனியார் வங்கிகள், சிறு நிதி வங்கிகள் செயல்படும் பகுதிகளில் புதிய கிளைகளைத் திறக்குமாறு பொதுத் துறை வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மாறி வரும் வங்கிச் சேவை சூழலுக்கு ஏற்ப, சவால்களை சமாளிக்கும் வகையில், புதிய வங்கிக் கிளைகள் திறப்பது அவசியமாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, வங்கிகளின் வாராக்கடன், பல பத்தாண்டுகளில் மிகக் குறைந்த அளவாக, 2024 ஆண்டின் 2.60 சதவீதத்தில் இருந்து கடந்த மார்ச்சில் 2.30 சதவீதமாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.