sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

தமிழக அரசு, ஜப்பானின் எஹிம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

/

தமிழக அரசு, ஜப்பானின் எஹிம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழக அரசு, ஜப்பானின் எஹிம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழக அரசு, ஜப்பானின் எஹிம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்


ADDED : ஜன 23, 2024 12:00 AM

Google News

ADDED : ஜன 23, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஜப்பான் நாட்டை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள், தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைத்துள்ளன.

அந்த வரிசையில், தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா முன்னிலையில், தமிழக அரசு மற்றும் ஜப்பானின் எஹிம் மாகாணம் இடையே, சென்னையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதில், தமிழக வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணு, எஹிம் மாகாணத்தின் கவர்னர் டோகிஹிரோ நகமுரா கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில், எஹிம் மாகாணத்தை சேர்ந்த, 70 தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த ஒப்பந்தம் வாயிலாக, வேளாண், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில், எஹிம் மாகாணத்தை சேர்ந்த நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் துவங்க உள்ளன.

மேலும், அந்த தொழில் நிறுவனங்கள், தமிழக தொழில் துறையுடன் இணைந்து, தமிழகத்தில் உள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்கும்.

இதுதவிர, சுற்றுச்சூழல் உட்பட பல்வேறு துறைகளில் இரு தரப்பும் இணைந்து செயல்பட உள்ளன.






      Dinamalar
      Follow us