sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ஒடிசாவில் மின் நிலையம் அமைக்கிறது என்.எல்.சி.,

/

ஒடிசாவில் மின் நிலையம் அமைக்கிறது என்.எல்.சி.,

ஒடிசாவில் மின் நிலையம் அமைக்கிறது என்.எல்.சி.,

ஒடிசாவில் மின் நிலையம் அமைக்கிறது என்.எல்.சி.,


ADDED : ஜன 13, 2024 07:46 PM

Google News

ADDED : ஜன 13, 2024 07:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி:என்.எல்.சி., நிறுவனம், 2,400 மெகாவாட் திறனுடைய அனல் மின் உற்பத்தி திட்டத்தை, ஒடிசாவில் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை 'பெல்' நிறுவனத்திற்கு வழங்கிஉள்ளது.

இதுகுறித்து என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கூறியதாவது:

என்.எல்.சி., இந்தியா நிறுவனம், 2,400 மெகாவாட் திறனுடைய மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை, 'பெல்' எனப்படும் பாரத் மிகுமின் நிறுவனத்திற்கு வழங்கிஉள்ளது.

ஒடிசா மாநிலத்தில் ஜார்சுகுடா மாவட்டத்தில், 'கிரீன் பீல்டு அல்ட்ரா சூப்பர் கிரிட்டிக்கல்' தொழில்நுட்பம் அடிப்படையில் இந்த அனல்மின் நிலையம் செயல்படும்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் 2,400 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு, ஒடிசா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு வழங்க ஏற்கனவே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அனல்மின் திட்டத்திற்கான நிலக்கரி, ஒடிசாவின் ஜார்சுகுடா, சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி.,யின், திறந்த வெளி சுரங்கங்களில் இருந்து கிடைக்கும்.

இத்திட்டத்தின் முதல் அலகு, 2028-29ம் நிதிஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கத்தின் அருகிலேயே அமைக்கப்பட உள்ள அனல்மின் நிலையம் என்பதால், உற்பத்தி செலவு குறையும்.

இதனால் மற்ற மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த அனல்மின் நிலையம் கடும் போட்டியாக திகழும். என்.எல்.சி., நிறுவனம் அதன் பயனாளிகளுக்கு குறைந்த விலை மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழ்நாடு, ஒடிசா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு வழங்க ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளது






      Dinamalar
      Follow us