Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ துளிகள்

 துளிகள்

 துளிகள்


ADDED : மார் 26, 2026 01:48 AM

Follow on Google

ADDED : மார் 26, 2026 01:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தரகு கட்டணத்தை உயர்த்தியது 'ஜீரோதா'

கு றிப்பிட்ட வகை வர்த்தகர்களுக்கு ஒரு ஆர்டருக்கான தரகு கட்டணம் 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்தப்படும் என, தரகு நிறுவனமான 'ஜீரோதா' தெரிவித்துள்ளது.

செபி விதிகளின்படி, முன்பேர வர்த்தக ஒப்பந்தத்தில், தங்களின் வர்த்தக கணக்கில் 50 சதவீதத்தை ரொக்கமாக அல்லது அதற்கு இணையான பங்கு உள்ளிட்டவற்றை பிணையாக பராமரிக்காத வர்த்தகர்களுக்கு மட்டுமே இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வாடிக்கையாளர்களின் கணக்கில் ரொக்கம் குறையும்போது, தனது சொந்த நிதியை கொண்டு ஈடுசெய்து வந்ததாக அந்நிறுவனம் கூறியுள்ளது. எனவே, புதிய கட்டுப்பாடுகளால் இனி அவ்வாறு செய்ய முடியாது என்பதால், இந்த கட்டண உயர்வு ஏப்., 1 முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.

'கிரெட்' செயலியில் புதிய வசதி

நி தி தொழில்நுட்ப சேவை வழங்கும் 'கிரெட்' செயலியில் இனி, 5,000 ரூபாய் வரையிலான யு.பி.ஐ., பரிவர்த்தனைகளை செய்ய 'பின்' நம்பருக்கு பதிலாக முகம் அல்லது கைரேகை பதிவை அங்கீகரிக்கும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. நேஷனல் பேமென்ட்ஸ கார்ப்பரேஷனுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதி, பின் நம்பர் மற்றவர்களுக்கு தெரிவதை தவிர்க்கவும், தவறான எண்களை பதிவு செய்வதை குறைக்கவும் உதவும். கிரெடிட் கார்டு பில், மின்கட்டணம் மற்றும் கடைகளில் பணம் செலுத்துவது என அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்தும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap