sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் பிளாஸ்டிக் ஆலையில் திடீர் தீ விபத்து; 3 பேர் உடல் கருகி பலி

/

டில்லியில் பிளாஸ்டிக் ஆலையில் திடீர் தீ விபத்து; 3 பேர் உடல் கருகி பலி

டில்லியில் பிளாஸ்டிக் ஆலையில் திடீர் தீ விபத்து; 3 பேர் உடல் கருகி பலி

டில்லியில் பிளாஸ்டிக் ஆலையில் திடீர் தீ விபத்து; 3 பேர் உடல் கருகி பலி

1


ADDED : ஜூன் 25, 2025 08:50 AM

Google News

1

ADDED : ஜூன் 25, 2025 08:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் பிளாஸ்டிக் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகினர்.

இது பற்றிய விவரம் வருமாறு: வடமேற்கு டில்லியில் ரிதலா மெட்ரோ நிலையம் அருகே பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

மளமளவென இந்த தீ, கட்டடத்தின் மற்ற தளங்களுக்கு வேகமாக பரவியது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயை அணைக்கும் பணியில் அவர்கள் வேகமாக இறங்கினர்.

ஆனால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததோடு, மற்ற தளங்களுக்கும் பரவியதால் கட்டுப்படுத்த முடியாமல் வீரர்கள் திணறினர். தீ விபத்தில் அங்குள்ள தொழிலாளர்கள் சிலர் சிக்கி இருக்கின்றனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தீயணைப்புத்துறை அதிகாரி ஜெய்ஸ்வால் கூறுகையில், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணிகள் நீடிக்கின்றன. 3 பேர் வரை பலியாகி உள்ளனர்.

சேத மதிப்பீடு எவ்வளவு என்று தெரியவில்லை. எரிந்த கட்டடத்தில் மேலும் சில உடல்கள் சிக்கி இருக்கலாம் என்று எண்ணுகிறோம் என்றார்.






      Dinamalar
      Follow us
      Arattai