ADDED : ஜன 24, 2024 05:55 AM
பெங்களூரு,: வரதட்சணை கொடுமையால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மாண்டியா, நாகமங்களாவை சேர்ந்தவர் ரஞ்சிதா, 27. இவரது கணவர் துமகூரின், துருவகெரேவை சேர்ந்த மது, 32. இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.
தம்பதி தற்போது பெங்களூரின், நாகதேவனஹள்ளியில் வசிக்கின்றனர். மது தனியார் நிறுவனத்திலும், ரஞ்சிதா தனியார் பள்ளியொன்றில் ஆசிரியையாகவும் பணியாற்றி வந்தனர்.
வரதட்சணை கொண்டு வரவில்லை என, ரஞ்சிதாவை கணவர் வீட்டினர் கொடுமைப்படுத்தினர். இதை பற்றி தன் பெற்றோரிடமும் கூறி வருந்தினார். நேற்று காலை, தன் பெற்றோருடன் வீடியோ கால் பேசிய ரஞ்சிதா, மதியம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வரதட்சணை கொடுக்கவில்லை என்பதால், மது வீட்டினர் தங்கள் மகளை கொலை செய்துள்ளதாக, ரஞ்சிதாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். ஞானபாரதி போலீசார் விசாரிக்கின்றனர்.

