ரேஸ்கோர்சில் ஜி.எஸ்.டி., ஏய்ப்பு ரூ.3.47 கோடி பறிமுதல்
ரேஸ்கோர்சில் ஜி.எஸ்.டி., ஏய்ப்பு ரூ.3.47 கோடி பறிமுதல்
ADDED : ஜன 13, 2024 11:23 PM
பெங்களூரு: ரேஸ் கோர்சின் குதிரை ரேஸ் புக்கங் கவுன்டரில் சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 3.47 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரின் ரேஸ் கோர்சில், குதிரை ரேஸ் புக்கிங் கவுன்டரில், நிர்ணயித்த விலையை விட கூடுதல் பணத்துக்கு டிக்கெட் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. ஜி.எஸ்.டி., செலுத்தாமல் மோசடி செய்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
எனவே நேற்று முன் தினம் சி.சி.பி., போலீசார் ரேஸ் கோர்சில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனை நள்ளிரவு 1:00 மணி வரை நடந்தது. இதுகுறித்து நேற்று நகர போலீஸ் கமிஷனர் கூறுகையில், ரேஸ்கோர்சில் கணக்கில் காண்பிக்காத 3.47 கோடி ரூபாயை சி.சி.பி., போலீசார் பறிமுதல் செய்ததாக கூறினார்.
ஹைகிரவுன்ட் போலீஸ் நிலையத்தில், 60 பேர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

