ADDED : மார் 25, 2025 09:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதியோர் மாதாந்திர நிதியுதவியாக 60 முதல் 69 வயதுக்கு உட்பட்டோருக்கு தற்போது, 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகை 2,500 ரூபாயாக உயர்த்தப்படும். அதேபோல, 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதாந்திர நிதியுதவி 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மேலும், 60 முதல் 69 வயதுக்குட்பட்ட முதியோரில் பட்டியல், பழங்குடி மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு கூடுதலாக 500 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்கு 3,227 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.