sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போர் பதற்றம்: போதுமான கச்சா எண்ணெய் இருக்கிறது

/

போர் பதற்றம்: போதுமான கச்சா எண்ணெய் இருக்கிறது

போர் பதற்றம்: போதுமான கச்சா எண்ணெய் இருக்கிறது

போர் பதற்றம்: போதுமான கச்சா எண்ணெய் இருக்கிறது

3


UPDATED : ஜூன் 14, 2025 08:54 AM

ADDED : ஜூன் 13, 2025 10:29 PM

Google News

3

UPDATED : ஜூன் 14, 2025 08:54 AM ADDED : ஜூன் 13, 2025 10:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இஸ்ரேல்- ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், 'இந்தியாவில் வரவிருக்கும் மாதங்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் உள்ளது' என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 77 டாலர் என்ற நிலையை எட்டி உள்ளது.

ஈரானில் அணு ஆயுத மையங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்கி வருவது தொடர்பாக அதிகாரிகளுடன் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவில் சிறப்பான எரிசக்தி உத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எரிசக்தி பொதுத்துறை நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

வரவிருக்கும் மாதங்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் இருப்பில் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய எரிசக்தி விநியோகப் பகுதிகளில், பதற்றங்கள் நீடித்து வரும் நிலையில் இந்தியாவில் போதுமான பெட்ரோல், டீசல், சமையல் காஸ் உள்ளிட்டவை இருப்பில் உள்ளது என ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us