sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அருணாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

/

அருணாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

அருணாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

அருணாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

1


ADDED : ஜூன் 07, 2025 09:17 AM

Google News

1

ADDED : ஜூன் 07, 2025 09:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இட்டாநகர்; அருணாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

லாங்டிங் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பொங்சாவ் என்ற பகுதியில் சந்தேக நபர்களின் நடமாட்டம் இருப்பதாக ஊகித்தனர்.

இதையடுத்து, அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று நடமாடி வருவதை கண்டறிந்தனர். பாதுகாப்பு படையினர் வந்ததை அறிந்த அந்த கும்பல் திடீரென துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சிறிது நேர துப்பாக்சிச் சண்டைக்கு பின்னர் பயங்கரவாதிகள் எல்லை பகுதியின் வழியாக மியான்மருக்குச் தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து அருணாச்சலபிரதேசம், மியான்மர் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us