sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பா.ஜ., வந்த பிறகே போலீசில் நவீனமயம் தொடங்கியது : உ.பி.,யில் அமித் ஷா பேச்சு

/

பா.ஜ., வந்த பிறகே போலீசில் நவீனமயம் தொடங்கியது : உ.பி.,யில் அமித் ஷா பேச்சு

பா.ஜ., வந்த பிறகே போலீசில் நவீனமயம் தொடங்கியது : உ.பி.,யில் அமித் ஷா பேச்சு

பா.ஜ., வந்த பிறகே போலீசில் நவீனமயம் தொடங்கியது : உ.பி.,யில் அமித் ஷா பேச்சு

1


ADDED : ஜூன் 15, 2025 03:23 PM

Google News

1

ADDED : ஜூன் 15, 2025 03:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: 2017 ல் உ.பி.,யில் பா.ஜ., வந்த பிறகுதான் போலீஸ் துறையில் நவீனமயமாக்கல் துவங்கியது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

உ.பி., தலைநகர் லக்னோவில் காவல்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட கான்ஸ்டபிள்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு காவலர்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார்.

அதனை தொடர்ந்து அமித் ஷா பேசியதாவது:

2017 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு உத்தரபிரதேசத்தில் காவல் படை நவீனமயமாக்கல் தொடங்கியது.

பிரதமர் மோடியின் தலைமையில் நாடு தழுவிய அளவில் இந்திய காவல் படைகளின் நவீனமயமாக்கல் தொடங்கியிருந்தாலும், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்த பிறகு 2017 ஆம் ஆண்டுதான் உ.பி.,யில் இந்த விஷயத்தில் முயற்சிகள் தொடங்கப்பட்டது.

2014 முதல் 2017 வரை இங்கு மத்திய அரசின் சீர்திருத்தங்கள் தெரியவில்லை. 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலக அளவில் முன்னணியில் இருக்கும், அதில் உ.பி., முக்கிய பங்கு வகிக்கும்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.






      Dinamalar
      Follow us