sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புரி ஜெகன்நாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக பிரத்யேக செயலி: அறிமுகம் செய்தது ரயில்வே

/

புரி ஜெகன்நாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக பிரத்யேக செயலி: அறிமுகம் செய்தது ரயில்வே

புரி ஜெகன்நாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக பிரத்யேக செயலி: அறிமுகம் செய்தது ரயில்வே

புரி ஜெகன்நாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக பிரத்யேக செயலி: அறிமுகம் செய்தது ரயில்வே


ADDED : ஜூன் 24, 2025 07:21 PM

Google News

ADDED : ஜூன் 24, 2025 07:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புரியில் நடைபெறும் புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் கலந்து கொள்ள திட்டமிடும் பக்தர்களுக்கு, குறிப்பிட்ட நேரம், நம்பகமான மற்றும் அணுகக்கூடிய ரயில் சேவைகளை வழங்க கிழக்கு கடற்கரை ரயில்வே, 'இ.சி.ஓ.ஆர்., யாத்ரா' என்ற பிரத்யேக மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது.

இது குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்காக பிரத்யேக செயலி அறிமுகம் செய்துள்ளோம். இந்த செயலி, திருவிழாவின்போது ரயில் தொடர்பான அனைத்து சேவைகளுக்கான விரிவான டிஜிட்டல் வழிகாட்டியை வழங்குகிறது.

யாத்ரீகர்கள் மற்றும் ரயில் பயனர்களுக்கு, சிறப்பு ரயில் அட்டவணைகள், வழக்கமான ரயில் நேர அட்டவணை, நேரடி ரயில் மற்றும் நடைமேடை தகவல், தங்குமிடம், சுற்றுலா வசதிகள், டிக்கெட் கவுன்டர்கள், முன்பதிவு உதவி பற்றிய தகவல்களை வழங்கும் வகையில்

இந்த செயலி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடவும், போக்குவரத்து சேவைகளை அணுகவும், ரயில் வசதிகள் தொடர்பான புதுப்பிப்புகளைப் பெறவும் 'இ.சி.ஓ.ஆர்., யாத்ரா செயலி ஒரு நிறுத்த டிஜிட்டல் தீர்வாகும்.

இவ்வாறு கிழக்கு கடற்கரை ரயில்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us
      Arattai