sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அசாமில் ரூ.100 கோடி போதை பொருள் பறிமுதல்

/

அசாமில் ரூ.100 கோடி போதை பொருள் பறிமுதல்

அசாமில் ரூ.100 கோடி போதை பொருள் பறிமுதல்

அசாமில் ரூ.100 கோடி போதை பொருள் பறிமுதல்


ADDED : ஜன 10, 2024 12:59 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவஹாத்தி, அசாமில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அதை வைத்திருந்த நான்கு பேரை நேற்று கைது செய்தனர்.

வடகிழக்கு மாநிலமான அசாமில் எல்லைப் பகுதியில் உள்ள மிசோரத்தில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுப்ரகாண்டி பகுதியில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதிலிருந்தவர்கள் போதைப் பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து, 5.1 கிலோ ஹெராயின், 64,000 யாபா மாத்திரைகள், 4 பாக்கெட்டுகள் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றின் மதிப்பு 100 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

காரில் இருந்த அசாமைச் சேர்ந்த ஒருவரையும், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுவரை இல்லாத அளவு அதிக மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அசாம் மாநிலம் முழுதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us