ADDED : ஜன 27, 2024 08:14 AM

புதுடில்லி: கடும் பனி காரணமாக, டில்லியில் ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். குளிர் காற்று வீசுவதால் மக்கள் நெருப்பை மூட்டி அங்காங்கே, சாலையில் அமர்ந்து குளிர் காய்ந்தனர்.
டில்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனி கொட்டி தீர்த்து வருகிறது. மக்கள் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்னைகளால் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, டில்லியில் அடுத்த சில நாட்களுக்கு பனிமூட்டம் நீடிக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 5 டிகிரி மற்றும் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக டில்லியில் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் வழக்கமான நேரத்தை விட தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். குளிர் காற்று வீசுவதால் மக்கள் நெருப்பை மூட்டி அங்காங்கே சாலையில் அமர்ந்து குளிர் காய்ந்தனர். தலைநகர் டில்லியில் 50 மீ., தொலைவில் எதிரே வருபவர்களை கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றன.

