sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம் விசாகப்பட்டினத்தில் வரும் 25ல் திறப்பு

/

நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம் விசாகப்பட்டினத்தில் வரும் 25ல் திறப்பு

நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம் விசாகப்பட்டினத்தில் வரும் 25ல் திறப்பு

நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம் விசாகப்பட்டினத்தில் வரும் 25ல் திறப்பு


ADDED : செப் 10, 2025 01:08 AM

Google News

ADDED : செப் 10, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விசாகப்பட்டினம் : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம், வரும் 25ம் தேதி திறப்பு விழா காணவுள்ளது.

கேரளாவின் வாகமனில் உள்ள, 125 அடி நீள கண்ணாடி பாலம், நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற பெருமை பெற்று ள்ளது. இதைக் காண சுற்றுலா பயணியர் இங்கு குவிவது அதிகரித்து வருகிறது.

கைலாசகிரி மலை இதை மிஞ்சும் வகையில், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், 180 அடி நீள கண்ணாடி பாலம் கட்டி முடிக்கப் பட்டுள்ளது.

அம்மாவட்டத்தின் கைலாசகிரி மலை உச்சியில் கட்டப்பட்டிருக்கும் இந்த பாலத்தில் இருந்து, வங்கக் கடலை கண்டு ரசிக்கலாம்.

கடலும், தொடுவானமும் சந்திக்கும் இடம் வரை கழுகு பார்வையில், இயற்கையை ரம்மியமாக ரசிக்கும் வகையில், 7 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் கட்டப் பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 100 பேர் வரை இந்த பாலத்தில் நடந்து செல்ல முடியும். எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு பேட்சில் 40 பேர் வரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்படுள்ளது.

கடினமான எடைகளை தாங்கும் அளவுக்கு 40 எம்.எம்., தடிமன் கொண்ட ஜெர்மன் கண்ணாடிகள் மூன்று அடுக்குகளாக இந்த பாலத்தில் பொருத்தப் பட்டுள்ளன.

தவிர, கண்ணாடிகளை தாங்கி பிடிக்க, 40 டன்கள் எடையிலான எக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

மலை உச்சியில் இருப்பதால், மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் காற்று வீசினாலும், தாங்கும் அளவுக்கு இதன் கட்டுமானம் வலுவாக கட்டப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணியர் சுத்தியலால் அடித்தாலும் உடையாத அளவுக்கு மிகுந்த தடிமனான கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பதால், புயல் போன்ற இயற்கை சீற்றங்களின்போதும், பாலத்திற்கு எந்த சேதமும் ஏற்படாது என கூறப்படுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து, 862 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த கண்ணாடி பாலத்தில், நடந்து செல்லும்போது, பறப்பது போன்ற மெய்சிலிர்க்கும் அனுபவத்தை சுற்றுலா பயணியர் பெற முடியும்.

வரும் 25ம் தேதி, இந்த கண்ணாடி பாலத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைக்கிறார். இதன் அருகிலேயே 5.5 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்ட திரிசூலம் கட்டப்பட்டு வருகிறது.

வருங்காலங்களில் கைலாசகிரி மலை சுற்றுலா பயணியரை வெகுவாக ஈர்க்கும் என நம்பப் படுகிறது.






      Dinamalar
      Follow us