ADDED : ஜூன் 14, 2024 05:54 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி வக்கீல் சங்க தேர்தலில், பொதுச்செயலாளராக நாராயண குமார் தேர்வு செய்யப்பட்டார்.
புதுச்சேரி வக்கீல் சங்க பொருளாளர், இணை செயலாளர், செயற்குழு உறுப்பினர் ஆகிய முக்கிய பதவிகளை வகித்தவர் நாராயணகுமார். இவர் சமீபத்தில், நடந்த வக்கீல் சங்க தேர்தலில் போட்டியிட்டார்.
இவர் மொத்தம் 619 ஓட்டுகள் பெற்று, இவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 430 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நாராயணகுமார் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, அவரிடம் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி செந்தில்குமார் வழங்கினார்.
