ADDED : ஜூன் 18, 2024 11:57 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : பழைய சாரம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவர் ரங்கபிள்ளை வீதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 11ம் தேதி கடையில் வேலை செய்யும் சரணவன் என்பவர் அவரது பைக்கை எடுத்து சென்று வீட்டு பின் கடை வாசலில் நிறுத்திருந்தார். பின்னர் சுப்ரமணி வீட்டுக்கு செல்ல பைக்கை எடுக்க சென்ற போது பைக் காணாமல் அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
