ADDED : ஜூன் 26, 2024 07:34 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : பைக்கை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, கேன்டீன் வீதியை சேர்ந்தவர் ஷர்ஸ்குப்தா, 36; இவரது தனது பைக்கை கடந்த 18ம் தேதி இரவு வீட்டு முன், நிறுத்தினார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.
இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, பைக் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
