ADDED : ஏப் 13, 2024 04:24 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு கிராமப்புறங்களில் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், தேனுார் ப.சண்முகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலப் போட்டிகள் நடந்தது.
சிறந்த கோலங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கிராமப்புற மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மேகலா, வரலாற்று விரிவுரையாளர் பாலசரஸ்வதி, உடற்கல்வி ஆசிரியர் ஏனாதிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
