Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கத்தியுடன் திரிந்த  ரவுடி கைது

கத்தியுடன் திரிந்த  ரவுடி கைது

கத்தியுடன் திரிந்த  ரவுடி கைது


ADDED : மே 28, 2024 03:34 AM

Follow on Google

ADDED : மே 28, 2024 03:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார் : கரிக்கலாம்பாக்கம் அருகே நள்ளிரவில் கத்தியுடன் சுற்றிய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் சென்றபோது, மர்ம நபர் போலீசாரை கண்டு ஓடினர்.

சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தவளக்குப்பம், நல்லவாடு, சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன்(எ) பாட்டில் மணி,19; என தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை சோதனை செய்தபோது கத்தி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடித்து, அதனை பறிமுதல் செய்தனர்.

பின்னர் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இரவு நேரத்தில் வேலை முடித்துவிட்டு கோர்க்காடு ஏரிக்கரை வழியாக தனியாக செல்லுபவரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்வதற்காக கத்தி வைத்திருந்தது தெரிந்தது.

மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்த மணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap