தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களுக்கு பாலியல் சீண்டல் மாகியில் கூலி தொழிலாளி கைது 

மாணவர்களுக்கு பாலியல் சீண்டல் மாகியில் கூலி தொழிலாளி கைது 

மாணவர்களுக்கு பாலியல் சீண்டல் மாகியில் கூலி தொழிலாளி கைது 


ADDED : ஜூலை 20, 2024 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2024 04:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மாகியில் பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கேரளா கோழிக்கோடு அருகே அமைந்துள்ளது புதுச்சேரி பிரதேசமான மாகி பிராந்தியம். இங்குள்ள அரசு பல் மருத்துவ கல்லுாரி அருகில் வசிப்பவர் ராஜேந்திரன், 57; விவசாய கூலித்தொழிலாளி.

இவர் தனது வீட்டின் வழியாக செல்லும் பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுப்படுவதாக புகார் எழுந்தது.

குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் விசாரணையில், ராஜேந்திரன் அவரது வீட்டின் வழியாக சென்ற 8 ம் வகுப்பு மாணவர்களை ஆபாசமாக தொட்டு பாலியல் சீண்டல்களில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

புகாரின் பேரில் பள்ளூர் போலீசார் போக்சோ சட்டம் பிரிவு 8ன் கீழ் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us