ADDED : ஆக 05, 2024 04:24 AM
அ நிறம் | அளவு
பாகூர்: கூலி தொழிலாளி துாக் கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் 62; கூலி தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், மகள்களும் உள்ளனர். ஜெயக்குமாருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடல் இறக்கத்திற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் உள்ள சமையல் கொட்டகையில் நைலான் கயிற்றால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், உதவி சப் இன்ஸ்பெக்டர் ஹமீது உசேன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
