sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலி வைரம் கொடுத்து முதியவரிடம் நகை பறிப்பு வேலுாரை சேர்ந்த 5 பேர் அதிரடி கைது

/

போலி வைரம் கொடுத்து முதியவரிடம் நகை பறிப்பு வேலுாரை சேர்ந்த 5 பேர் அதிரடி கைது

போலி வைரம் கொடுத்து முதியவரிடம் நகை பறிப்பு வேலுாரை சேர்ந்த 5 பேர் அதிரடி கைது

போலி வைரம் கொடுத்து முதியவரிடம் நகை பறிப்பு வேலுாரை சேர்ந்த 5 பேர் அதிரடி கைது


ADDED : பிப் 02, 2024 03:33 AM

Google News

ADDED : பிப் 02, 2024 03:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் போலி வைரம் கொடுத்து முதியவரை ஏமாற்றி 4 சவரன் நகையை அபகரித்து சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, அம்பலத்தாடையர் மடத்து வீதியை சேர்ந்தவர் கஸ்துாரி,74; இவர் கடந்த 20ம் தேதி தியாக முதலியார் வீதி வழியாக நடந்து சென்றார். அவ்வழியாக வந்த மர்ம நபர்கள், அவரிடம் பேசி, 'நாங்கள் இலங்கையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு வைர கற்களை கொண்டு செல்கிறோம். உங்களுக்கு வேண்டும் என்றால், வாங்கி கொள்ளுங்கள், என ஆசை வார்த்தை கூறினர்.

அதை நம்பி வைர கற்களை வாங்கிக் கொண்ட அவர், தான் அணிந்திருந்த 3 சவரன் செயின்,ஒரு சவரன் மோதிரம் ஆகியவற்றை மர்ம நபர்களிடம் கொடுத்தார். பின், மீதி பணம் எடுத்துவர கஸ்துாரி, வீட்டிற்கு சென்றார்.

வீட்டில் இருந்தவர்களிடம், அவர், வைர கற்களை காண்பித்தபோது, அது போலி வைரம் என தெரியவந்தது.

முதியவருடன், வீட்டில் இருந்தவர்கள், போலி வைரம் கொடுத்த நபர்கள் தேடி சென்றபோது, அவர்களை காணவில்லை.

இதுகுறித்து, கஸ்துாரி கொடுத்து புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்து, மோசடி நபர்களை சப் இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில், கஸ்துாரியிடம் வாங்கிய நகைகளை விற்க நேற்று புதுச்சேரியில் உள்ள நகை கடைக்கு வந்த நபர்களை, போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள், வேலுார் ராஜ்குமார்,34; சதீஷ், 36; நளமுகமது,66; ஜெயவேலு,38; ஜமால் நாசர்,65, என்பதும், காஸ்துாரியிடம் நகையை அபகரித்ததும், இவர்கள் மீது வேலுார் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

அதன்பேரில், அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள நகைகளை மீட்டனர்.

பின்னர் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us