sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அடிப்படை வசதிகளை வலியுறுத்தி அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்

/

அடிப்படை வசதிகளை வலியுறுத்தி அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்

அடிப்படை வசதிகளை வலியுறுத்தி அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்

அடிப்படை வசதிகளை வலியுறுத்தி அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முதலியார்பேட்டை தொகுதியில் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை எனக் கூறி, தொகுதி எம்.எல்.ஏ., சம்பத்தை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

முதலியார்பேட்டை தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை, குண்டும் குழியுமான சாலைகள், தொடர் மின்வெட்டு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து, மரப்பாலம் சிக்னலில், அ.தி.மு.க., சார்பில், நேற்று காலை 10:00 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.,வினரும், தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதையடுத்து போலீசாரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் விரைந்து வந்து முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொகுதியில் நிலவும் பிரச்னைகளை பாஸ்கர் பட்டியலிட்டார்.

சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட தொகுதி பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதனை ஏற்று, 10:30 மணியளவில் மறியலை கைவிட்டனர்.

போராட்டத்தால் புதுச்சேரி - கடலுார் சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




    • Dinamalar Events


    Dinamalar