நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: பஸ்சில் மதுபாட்டி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் நகர இன்ஸ்பெக்டர் புருேஷத்தமன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். புதிய பஸ் ஸ்டேண்டில் சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை போலீசார் பிடித்து விசாரித்து, சோதனை செய்தனர். அதில் மது பாட்டில்கள் வைத்திருந்ததும், மேலும் அவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த பிரவின் என்றும் காரைக்காலில் இருந்து மது பாட்டில்களை வாங்கி சென்று தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.
நகர் போலீசார் வழக்குப் பதிந்து பிரவினை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.10ஆயிரம் மதிப்புள்ள 150மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

