sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி

/

வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி

வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி

வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கரையாம்புத்துார் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, கரையாம்புத்துார் பாகூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மதன், 24, பெயிண்டர். இவர் நேற்று இரவு 12.35 மணியளவில் அதே பகுதியில் உள்ள தனியார் பாரில் மது குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிலர், மதனை அழைத்துள்ளனர். அங்கிருந்து தப்பியோட முயன்ற மதனை அந்த கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது. பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார்.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற கரையாம்புத்துார் போலீசார், மதனை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் நடந்த இடம் தமிழகம் - புதுச்சேரி எல்லைப்பகுதி என்பதால் கரையாம்புத்துார் போலீசார் மற்றும் வளவனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar